குறுங்கவிதைகள்(2)

வெள்ளைக் காகிதம்

அச்சுக் கல்லறை

உள்ளே கவிதை.

****

கோழிக்கறி

செரிக்கவில்லை,

எழுப்பிவிட்டது காலையில்!

****

கோகுலத்து

ராஜாவாம்!

வெண்ணெய்த் திருடன்.

****

கோவில் வாசல்

துவார பாலகர்!

நுழைவாயிலே

யோனியா?

****

அபசாரம்

என்கிறான்…

என்றாலும் வேண்டும்

விபசார உபசாரம்.

****

வாழ்க கோஷக்காரன்

வேஷக்காரன்.

நிராகரித்தவன்

உத்தமன்.”

About The Author