கோலம்

காலையில் எழுந்தவுடன்
எல்லோரும்
சூரியனை நமஸ்காரம்
செய்கிறார்கள்
சூரியன் மட்டும்
உன்னையும்,
உன் கோலத்தையும்,
நமஸ்காரம் செய்கிறது..!

உன் வீட்டில்
யாருமில்லா நேரம்
நீ போட்டு வைத்த
கோலமும், நானும்,
தனிமையில். .

வெள்ளைக் கோலப்பொடியை
உன் சிரிப்பிலிருந்துதான்
தயாரிக்கிறார்களா?

கோலம் போடும் போது
வித விதமாய் வெட்கப்படுவாயா?
ஒவ்வொரு வர்ணப்பொடிகளிலும்
துல்லியமாய்த் தெரிகிறது
உன் வெட்கம்..!

கோலத்தின் அழகிற்குப்
போட்டியாக
சுற்றிலும் உன் பாதச் சுவடுகள்..!

About The Author

2 Comments

Comments are closed.