சர்க்கஸ்காரன்

சித்திரைத் திருவிழா
அழகர் குதிரை சப்பரம்
தொடர்ந்து அனைவரின்
கவனம் ஈர்ப்பவன்
மஹாராஜா சர்க்கஸ்
மிக்கிமௌஸ் வேடமிட்டவன்.

பெருத்த பின்புறத்தோடு
இரு கரங்களையும் விரித்து
ஆடும் அழகில் அத்தனை
சிறார்களும் அவன் எல்லைக்குள்.

கணவன் முன் மனைவி
அப்பன் முன் மகளென
பெரும்பான்மை பாண்டிய
பெண்டுகளின் கரம் பற்றி
டிக்கட் கௌண்டர்
இழுத்துச்சென்ற பெருமையில்
இளைஞர்களின் பொறாமைக்
கண்கள் அவன் திசை நீளும்.

பல் போன கிழவிகளிடம்
கோகுலக் கண்ணனாய்
மாறி செய்யும் அத்துமீறல்
கிழவிகளைக் கைத்தடி
கொண்டு அவனைத்
துரத்தி பின் ஓடச் செய்யும்.

சண்டியர்களும் இவனது
இழுப்பில் கூடாரத்திற்குள்
சிக்கி அடங்கிக் கிடப்பர்.
குற்றம் கற்பிக்கப்படாத
அவனது சேஷ்டைகளில்
அழகர் பவனி வருகிறார்

About The Author