சிரிக்க… சிரிக்க.. – 10

மனைவி: நம்ம சமையல்காரியை வேலையை விட்டு நிறுத்திட்டு நானே என் கையால உங்களுக்கு சமைச்சுப் போட்டா எனக்கு நீங்க என்ன தருவீங்க?

கணவன்: நான் எதுவும் தரமாட்டேன். ஆனால் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்காரங்க உனக்கு 5 லட்சம் தருவாங்க!

******

கணவன்: சாயந்திரம் 5 மணிக்கு பக்கத்து மைதானத்துல நடக்கும் குதிரை ரேஸுக்குப் போகப்போறேன்.

மனைவி: முதல்ல சரியா நடங்க. அப்புறமா ரேஸ்ல ஓடறதைப் பத்தி யோசிக்கலாம்!.

******

கணவன்: எனக்கு கோபம் வந்தா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது.

மனைவி: உங்களுக்கே தெரியாதப்போ அதைப்பத்திப் பேசி என்ன பிரயோஜனம்?

******

கோபத்தில்,
கணவன்: எனக்குள்ளே தூங்கிட்டிருக்கும் மிருகத்தை தட்டியெழுப்பிடாதே.

மனைவி: நான் என்னிக்குமே பூனையைப் பார்த்து பயந்ததில்லை.

******

மனைவி: உங்களுடைய பிறந்த நாளுக்காக விலையுயர்ந்த பரிசு ஒன்னு வாங்கியிருக்கேன். நீங்க அதைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவீங்க.

கணவன்: உனக்குத்தான் என்மேல எவ்வளவு அன்பு! பரிசு என்னன்னு காட்டு.

மனைவி: இருங்க.. ஒரே நிமிஷத்துல அதைப் போட்டுக்கிட்டு வந்துடறேன்.

******

About The Author

6 Comments

  1. subash

    எல்லா ஜோக்ஸும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்கோ… சுபாஷ்

  2. raamabaskaran

    கோபத்தில்,
    கணவன்: எனக்குள்ளே தூங்கிட்டிருக்கும் மிருகத்தை தட்டியெழுப்பிடாதே.

    மனைவி: நான் என்னிக்குமே பூனையைப் பார்த்து பயந்ததில்லை.

Comments are closed.