சொற்கள்

சொற்கள்

எப்போதும்
இல்லாமல் போகிறது
நினைக்கிற தருணங்களில்
நினைக்கிறபடி
யாருக்கேனும் தருவதற்கு
நமக்கென்று
அல்லது நம்மிடம்
ஒரு சொல்!

இதுவரை உதிர்த்தவற்றைக்
கூட்டிக் கழித்துப் பார்த்தாலும்
அல்லது
கொட்டிக் கவிழ்த்துக் குவித்தாலும்
குப்பையும் நாற்றமும் தவிர
ஏதுமில்லை!
ஆனாலும்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்…

*****

ஒவ்வொரு நாளும்
எத்தனை சொற்களை
இழந்தாலும்
பிணத்தின் மூடிய கைகளுக்குள்
சிக்கிய பொருளைப்போல
எடுக்கமுடியாமல்
காத்திருக்கும் நம்பிக்கை
மறுநாளின் சொற்களைப்
புதுப்பிக்கிறது வாழ்வதற்கு.
மீட்டெடுக்கவும்…

*****

About The Author

1 Comment

  1. rishaban

    யாருக்கேனும் தருவதற்கு
    நமக்கென்று
    அல்லது நம்மிடம்
    ஒரு சொல்!

    அருமை !

Comments are closed.