ஜோதிடம் கேளுங்கள்

வணக்கம். நான் 07.07.58-இல் பிறந்தவள். இப்போது சென்னையில் வசித்து வருகிறேன். சிவில் எஞ்சினியரிங்கில் முதுநிலைப் பட்டம் பெற்று, தற்போது வீட்டில் இருக்கிறேன். இச்சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன். நான் தற்போது தொழில் ஆரம்பிக்கலாமா?
– தமிழ்ச்செல்வி, சென்னை

அன்பு நிலாச்சாரல் வாசகி தமிழ்ச்செல்வி அவர்களே!
51 வயதாகும் தங்களின் ராசி கும்பம், நடசத்திரம் பூரட்டாதி, லக்னம் மிதுனம் ஆகும். சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற தங்களின் சிந்தனை பாராட்டுக்குரியது. தங்களின் நடசத்திரம் குருவின் சாரம் பெற்றுள்ளதால், தாங்கள் தங்கள் துறை சார்ந்த மற்றும் அதன் தொடர்பான செய்திகளைச் சேகரித்து அதனைப் புத்தக வடிவில் அளிக்கலாம். மாணவர்களுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிப்பது, பிராஜெக்ட் போன்றவற்றிற்கு உதவி செய்யலாம். 2-க்கு உடைய சந்திரன் 9-ல் அமர்ந்திருப்பதால், ஆலோசனை மற்றும் பொது ஜனத் தொடர்பு தங்களுக்கு ஏற்ற துறைகள். மூளையை மூலதனமாக வைத்து செயல்பட்டால் லாபமும், நற்பெயரும் கிடைப்பது உறுதி. உங்களின் ஆக்கபூர்வமான எண்ணங்கள் விரைவில் வடிவாக்கம் பெற, நிலாச்சாரல் உங்களை வாழ்த்துகிறது.

******

வணக்கம். என் பெயர் கார்த்திக். நான் 02.03.1980-இல், பிற்பகல் 8.30-இற்கு, தஞ்சாவூரில் (மருவூர்) பிறந்தேன். ஐயா, நான் இந்தப் பிறவியில் சித்தியடைய வாய்ப்புள்ளதா? அல்லது சித்தர் மார்க்கம் செல்ல வழியுள்ளதா?
கார்த்திக்

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு.கார்த்திக் அவர்களே!
28 வயதாகும் தங்களின் ராசி சிம்மம், நடசத்திரம் பூரம், லக்னம் கன்னியாகும். தங்கள் ஜாதகப்படி ஆன்மீகப் பெரியோர்களின் தொடர்பு, அறிமுகம் ஆகியவை கிட்டும். சித்தி அடைவதும், சித்தர் மார்க்கம் வழி செல்வது என்பதும் அனைவருக்கும் வாய்க்காது. ஆன்மீகத்தொடர்புகள் மூலமும், அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலமும் வாழ்வில் நிறைவு அடையும் வாய்ப்பு தங்களுக்கு உள்ளது.

******

வணக்கம். நான் 04.08.1975 இல் பிற்பகல் 2.30 க்கு, பேலசூரில் பிறந்தேன். எனக்கு எப்போது நிரந்தர வேலை கிடைக்கும் என்று சொல்லமுடியுமா? – ர. செல்வம், பேலசூர், கடலூர் மாவட்டம்

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு செல்வம் அவர்களே!
33 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மிருகசிரீடம், ராசி மிதுனம், லக்னம் விருச்சிகம். நடப்பு திசைப்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் நிரந்தர வேலையில் தாங்கள் அமர்ந்து விடுவீர்கள். தங்கள் நட்சத்திர அதிபதியான செவ்வாயை, செவ்வாய்க் கிழமை தோறும் வழிபட்டு வர, தாங்கள் விரும்பிய துறையில் வேலை கிடைப்பதுடன் தங்களின் தொழில் வளமும் சிறப்பாக இருக்கும்.

***********************

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

1 Comment

  1. r.sivakumar

    நிலாசாரல் இது ஒரு வரப்ரசாதம், அறிவு பெட்டகம்

Comments are closed.