ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? – வி.சுப்பிரமணியன், திருநெல்வேலி.

அன்பு நிலாச்சாரல் வாசகர் சுப்ரமணியன் அவர்களே!

37 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரட்டாதி, ராசி மீனம், லக்னம் துலாம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் கோசார குரு டிசம்பர் மாதம் முதல் தங்களின் லக்னத்திலிருந்து 5-ம் வீடு செல்லும் காலம் தங்களின் திருமணம் கைகூடும். தாங்கள் செவ்வாய்க் கிழமைதோறும் முருகனை வழிபட்டு "வடிவுந் தனமும் மனமுங் குணமுங் குடியுங் குலமுங் குடிபோ கியவா அடியந் தமிலா அயில்வேல் அரசேமிடியென் றொரு பாவி வெளிப்படினே” என்ற பாடலைப் பாடி வாருங்கள். தமிழ்ப் புத்தாண்டுக்குள் திருமணம் கை கூடிவிடும். நல்ல மண வாழ்க்கை அமைவதற்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*****

எனக்குக் கடந்த 2 வருடமாக நிரந்தர வேலை இல்லை. எப்போது நல்ல வேலை அமையும்? சொந்தத் தொழில் செய்வதாக இருந்தால் என்ன தொழில் செய்யலாம்? இருக்கும் நிறைய கடன்களை எப்போது அடைக்க முடியும்? – விக்டர், தஞ்சாவூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் விக்டர் அவர்களே!

35 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்ராடம், ராசி மகரம், லக்னம் துலாம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் வேலையைக் குறிக்கும் செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால், செவ்வாய்க் கிழமை தோறும் முருகனை வழிபட்டு, தங்களின் பெயரில் அர்ச்சனை செய்து, தேனும், தினைமாவும் நிவேதனம் செய்து வர, வரும் ஆங்கிலப் புத்தாண்டுக்குள் தங்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். விரைவில் அவ்வாறு அமமய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*****

பொறியியல் படித்துள்ளேன். மேற்படிப்பைத் தொடரலாமா? வேலை எப்போது கிடைக்கும்? என்ன மாதிரி வேலை கிடைக்கும்? – வருண், செங்கல்பட்டு.

அன்பு நிலாச்சாரல் வாசகர் வருண் அவர்களே!

24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரோகிணி, ராசி ரிஷபம், லக்னம் மகரம் ஆகும். தங்களின் ஜாதகத்தில் கோசார குரு டிசம்பர் மாதம் முதல் 2-ம் இடத்திற்கு மாறுவதால், தாங்கள் படித்த துறையிலேயே, பொது ஜனத் தொடர்பு சார்ந்த துறையில் தங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையுடன், மாலை நேரக் கல்வி அல்லது பகுதி நேரமாக மேற்படிப்புப் படிப்பதற்கும் வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளன. நல்ல வேலை கிடைப்பதற்கும், மேற்படிப்பு அமைவதற்கு நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

************************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author