தமிழ் என்னும் விந்தை! -(13)

சருப்பதோபத்திரம் – 3

யாழ்ப்பாணத்துக் கவிஞர் க.மயில்வாகனப் பிள்ளை இயற்றிய ஒரு சருப்பதோபத்திரம் இது:-

தேவா நாதா தாநா வாதே
வாரா தேதா தாதே ராவா
நாதே னாகா கானா தேநா
தாதா காயா யாகா தாதா

இதன் பொருள் :-

தேவா – பிரகாசம் உடையவரே! நாதா – தலைவரே!
தாநா – வலிமையினை உடையவரே! தாதா – பிதாவே! வாநா – ஆகாயமானவரே! தேன் நாகா – (கூண்டுகள் தூங்கும் கீரி) மலையை உடையவரே! கானா – கீதப்பிரியரே!
தே – தெய்வமே! காயா – திருமேனியை உடையவரே! யாகா – யாகங்களுக்கு உரியவரே! தாதா – கொடையாளரே! வாது வாராதே – வாது வாராதபடி
தேரா – சேர்ந்து
நா தா தா – நா வன்மை தந்தருள்க!

இனி இதை 64 அறைகளில் பொருத்திப் பார்ப்போம்:

எந்த வாயில் வழியாக நுழைந்தாலும் பாடலைப் படிக்க முடிகிறது. அதுதான் சருப்பதோபத்திர பந்தம்!

இனி கவிஞர் பா.முனியமுத்து (உவமைப்பித்தன்) இயற்றிய ஒரு சருப்பதோபத்திரத்தைப் பார்ப்போம்:-

பாகா நாதா தாநா காபா
காவே நீகா காநீ வேகா
நாநீ தாமா மாதா நீநா
தாகா மாதே தேமா காதா!

இதை 64 கட்டங்களில் பொருத்திப் பார்த்தால் வரும் சருப்பதோபத்திரம் இதுதான்:-

தமிழ் என்னும் அமுத சாகரம் பரந்து விரிந்த, எல்லை காண முடியாத ஒன்று. முடிந்தவரை அதை அள்ளி அள்ளிப் பருகலாம்.

(தொடரும்)

About The Author