தமிழ் என்னும் விந்தை! (14)

சருப்பதோபத்திரம் – 4

இந்த வாரம் ‘யாப்பருங்கலவிருத்தி‘ உதாரணமாகத் தரும் நான்கு சருப்பதோபத்திரச் செய்யுள்களைக் கண்டு மகிழ்வோம்:

நீகா வாமா மாவா காநீ
காமா வாதா தாவா மாகா
வாவா கோதா தாகோ வாவா
மாதா தாமா மாதா தாமா

பீநீ காமா மாகா நீபீ
நீகா மாவா வாமா காநீ
காமா வாகோ கோவா மாகா
மாவா கோதா தாகோ வாமா

மாநீ காமா மாகா நீமா
நீகா மாவா வாமா காநீ
காமா வாகோ கோவா மாகா
மாவா கோதா தாகோ வாமா

மாமா தாநீ நீதா மாமா
மாதீ யாகா காயா தீமா
தாயா வேடா டாவே யாதா
நீகா டாயா வாடா காநீ

‘சருப்பதோபத்திரம்‘ பற்றிய குறிப்பாக யாப்பருங்கல விருத்தி குறிப்பிடுவது பின் வருமாறு:

எட்டெழுத்தான் இயன்ற நான்கு வரியாம். அவை மாலைமாற்றும், சுழிகுளமுமாய் ஒருங்குவரக் கொள்வது.

மாலைமாற்று, சுழிகுளம் பற்றி இந்தத் தொடரில் பின்னர் பார்க்கப் போகிறோம்.

நான்கு செய்யுள்களை எடுத்துகாட்டாகத் தந்து விட்டு குறிப்புரையாக நூல் தருவது: "இப்பெற்றியே எல்லாவெழுத்தும் மொழிக்கு முதலாயினவே நிறுவி, ஓரெழுத்துக்கோரடியாகப் பாடிப் பொருள் முடிப்பனவுஞ் சருப்பதோபத்திரம் எனப்படும். அவையும் வந்த வழிக் கண்டு கொள்க."

சருப்பதோபத்திரம் தமிழின் ஒரு பரிமாணத்தை விளக்கும் ஓர் அரிய வகைச் சித்திரக் கவியாகும் என்பதில் ஐயமில்லை!

–விந்தைகள் தொடரும்…

குறிப்பு: வாசகர்கள் முந்தைய கட்டுரைகளைப் படித்தால் எப்படி சருப்பதோபத்திரத்தைக் கட்டங்களில் படிப்பது என்பதை அறிய முடியும்.

About The Author