தும்மலுக்கு நன்றி

தும்மலின் முடிவில்
அன்று நான்
அனிச்சையாய் கூறிய ‘அம்மா’,
நினைவூட்டியது எனக்கு
மறுநாள் அவளுடைய
பத்தாம் ஆண்டு திதி என்று.

தும்மிய பின் மெளனம் காக்கும்
என் பையனிடம்
”அம்மா’ ‘அப்பா’ சொல்லிப் பழகு’
என்கிறேன் சில நாட்களாய்.
தும்மலுக்கு நன்றி.

About The Author

4 Comments

Comments are closed.