நினைவுகள்

இரவு , பகல்
இரண்டைத் தவிர
இன்னொரு பொழுது
இருந்தால் நன்றாக இருக்கும்
அப்போதும் உன்னையே நினைக்க..

என் இமைகள்
மூடும் போது
உன் நினைவுகள்
திறந்து கொள்கின்றன..

உன் நினைவுகள் – மனதில்
ஒடிக்கொன்டிருக்க..
ஒடிக்கொன்டிருக்கும்
மின்விசிறியைப் பார்த்து – தனியாய்
நான் சிரிக்க..
கூடியிருந்த நண்பர் கூட்டம்
கும்மி கொட்டி சிரிக்க..
………..
எல்லா சிரிப்புகளிலும் நீயே..!

About The Author

2 Comments

Comments are closed.