நெஞ்சின் சுமைகள்

நீ உடனிருந்த போது உலகைப் பார்த்து
நான் உரைத்தேன்:
"என்னவள் மட்டும் போதும்;
உலகெனக்கு வேண்டாம்" என்று.
நீ என்னை உதறிவிட்டுச் சென்ற பிறகு
உலகு என்னைப் பார்த்து உரைக்கிறது:
"அதோ போகிறான் பார்,
பைத்தியக்காரன்" என்று.

பூவிதழ்களில் எல்லாம்
தீ சுட்ட வடுக்கள்;
ஆம், என் நெஞ்சமெனும்
பூவிதழ்களில் எல்லாம்
நீ சுட்ட வடுக்கள்;
மூங்கிலில் துளை செய்தால்
புல்லாங்குழல் ஆகும்.
நீயோ, குழலையே துளைத்து
இசை வேண்டுமென்கிறாய்,
எப்படி இது சாத்தியம்?

கையிலே சுமை இருந்தால்
இறக்கி வைக்க வழியுண்டு;
நெஞ்சத்தின் சுமைகளை
இறக்கி வைக்க வழி ஏது?

உன்
நினைவென்னும்
மூட்டைகளின் பாரம்
அழுத்துகையில்
வாழ்க்கை நதியை
நான்
கடப்பது
எப்படி?

About The Author

3 Comments

  1. priya

    really it was too good especially the mans crying about her memories was too hurting , my eyes filled with tears

Comments are closed.