பாபா பதில்கள் – சிதம்பர ரகசியம் (4)

கேள்வி: நடராஜருடைய pose, காஸ்மிக் டான்ஸ் – அதனுடைய தத்துவம் என்ன?

(continuation)

சிதம்பரத்தில் போய் சிதம்பர ரகசியம் என்னன்னு கேட்டா அவங்க என்ன சொல்வாங்கன்னா, வியாக்ரபாதருக்காவும், பதஞ்சலி முனிவருக்காகவும் நடராஜர் டான்ஸ் ஆடினார்ன்னு சொல்வாங்க. வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் என்கிறதை நாம் பாம்பாட்டிச் சித்தர், புலிப்பாணி முனிவர்னு சொல்லலாம். அதனுடைய தமிழாக்கம் இதுதான். இரண்டு ஓம்- இரண்டு சித்தர்கள்ன்னு வைச்சுக்கலாம். வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்: இரண்டு ஓம். அவங்க இரண்டு பேருக்காக நடராஜருடைய நடனம் நடைபெற்றது. இரண்டு ஓம் அந்த இரண்டு பேருடைய form அதுக்கு நடுவில நடராஜருடைய தாண்டவம் நடக்கிறது அப்படின்னு நம் பெரியவங்க நமக்குப் புரியவைக்க முயன்றார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

நடராஜர் தாண்டவம் என்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிற விஷயம். It is a dance of The Atom. Science acknowledges. ஆன்மீகமும் இந்த விஷயங்களை உண்மையாகவே புரிந்து வைத்திருக்கிறது. ஆன்மீகமும் விஞ்ஞானம் தான். சௌந்தர்யலஹரியை ஆதிசங்கரர் கைலாயத்திற்கு போய் வாங்கிகிட்டு வந்தார். வருகிற வழியில நந்தி பகவான் இதெல்லாம் பூமியிலிருக்கிற ஜனங்களுக்கு கொண்டு போய் கொடுத்திடாதே; மக்களுக்கு தகுதியில்லை. இதெல்லாம் கொண்டுபோய் கொடுக்காதேன்னு வாங்கி வைச்சுக்கிட்டார், though he directly collected from Kailash அதில் கொஞ்சம்தான் ஆதிசங்கரருக்கே கிடைச்சது. முழுவதும் அவருக்கே கிடைக்கலை. அதிலே 6வது ஸ்லோகம் ஒன்று இருக்கு. அதை ஒரு லட்சம் தடவை ஏகாக்கிரமாக சொன்னால் அவங்களுக்கு தேவியோட தரிசனம் கிடைக்கும் என்பது ஒரு பிரத்யட் சமான உண்மை. ஒரு இலட்சம் தடவை சொல்லணும். அப்ப, அந்த form கிடைக்கும். ஷார்ட்கட்டில ஜெர்மன்காரன் என்ன பண்ணான், ஒரு இலட்சம் தடவை சொல்றது நடக்கிற வேலையா? அதுவும் ஏகாக்கிரமாக சொல்லணும், ஒரு unstinted faith and concentrated mind உடன் சொல்லணும். அதனாலே ஒரு 5, 6 கேசட்டில் வரிசையா டேப் பண்ணிட்டான். மாற்றி மாற்றி ஒரு லட்சம் தடவை சொல்றமாதிரி பண்ணிக்கிட்டு இருந்தான். He recorded it through some good Brahmins of Kerala. அந்த கேசட் பிளேயரை ஆன் பண்ணா ஒரு லட்சம் தடவை வரும், தொடர்ந்து வரும். அவன் அந்த ஒரு லட்சம் தடவை பண்ணி முடிச்சபிறகு பார்த்தால் அந்த டேப்ரிக்கார்டர் எல்லாம் எரிஞ்சு exactly அம்பாள் எப்படி இருப்பாளோ, அந்த form அந்த சாம்பலில் வந்திருக்கு. So, It is possible! அவனுக்கு வேண்டியது அந்த form தானே, அந்த தரிசனத்தைத் தானே அவன் தேடிக்கிட்டு இருந்தான். அவனுக்கு அந்த மாதிரி கிடைச்சதுன்னு நிரூபணம் ஆகியிருக்கு. They are not available to the physical eye. வெளிப்பார்வைக்கு அதெல்லாம் தெரியறதில்லை.

About The Author

1 Comment

Comments are closed.