பொங்குக பொங்கல்!

தீமைகளைத் தடுக்க
முடியாதபோது..
உண்மைகளைச் சொல்ல
இயலாதபோது..
அநீதிகளைக் காணும்போது..
சக மனிதர்
இழிவுபடுத்தப்படும்போது..
இயற்கை
மாசுபடுத்தப்படும்போது..
எதுவுமே
அரசியலாக்கப்படும்போது..
அடிப்படை வசதிகள்கூட
கனவாகும்போது..
பிஞ்சுகள் மரணம் கேட்டால்..
பள்ளிச் சிறுமிகள் கூட
தற்கொலைக்குத் தயாராகும்போது..

சகிக்க முடியாத ஒவ்வொரு
செய்திக்கும்
மனசு
பொங்குகிறது.

இறைவா..

எங்கள் சகோதரர் வீடுகளில்
என்றென்றும்
பால் மட்டும் பொங்க..
பரவசம் பொங்க..
அன்பு பொங்க..

அதற்காக
உன் அருள்
பொங்கிப் பெருகட்டும்!

About The Author