மலரோடு உறவாடும் கவிதைகள்

* இல்லையென்று சொல்லாமல்
ஒரு மலரினைக் கொடு…
நெஞ்சம் நிறையும்!

*மலரினைக் காண
மண்ணுக்குள் தேடல்…
வேர்கள்!

*பூங்காவினுள் தென்றலின்
ஒரு நேர்காணல்…
பூக்களோடு!

*மலரைத் தாங்கும்
காம்பென…
கர்ப்பிணிப்பெண்!

*காய்க்க முடியாத
காகித மலர்கள்…
விலை மகளிர்!

*மிதியுறும் ரோஜாக்களே
மன்னியுங்கள்…
இறுதிவூர்வலம்!

About The Author

2 Comments

  1. R.V.Raji

    கா.ந. கல்யாணசுந்தரம்!!
    கவிதை ரொம்ப சூப்பர் ஸார்! கடைசி மூன்று பாய்ண்ட்ஸும் டாப்.

  2. k.hariharan

    இது ஒரு நல்ல கவிதை.

    க. அரிகரன்.
    சென்னை.

Comments are closed.