மாமதயானை கவிதைகள்

குழந்தைகளின் சந்தோசங்களை
தூக்கிக்கொண்டு போகிறான்……
பொம்மை விற்பவன்

***
விழா காலங்கள்
வரும் போகும்……
விடிவுகாலங்கள்….?

***
அகதிகள் முகாம்
அடிக்கடி வந்து வெறுப்பேற்றும்…
மண்வாசனை

***
உன் வசை
வார்த்தைகளும்
எனக்கு….
இசை

***
மனிதர்களில் பலர்
நாற்காலிகளாய்ச் சிலர்
கருங்காலிகளாய்
………..

About The Author

2 Comments

  1. Rishi

    வெகுவாய் ரசித்தேன். பாராட்டுக்கள்.
    நூலாய் தங்கள் கவிதைகள் வந்திருக்கின்றனவா?

  2. மாமதயானை

    தங்கள் இரசிப்புத்தன்மைக்கு நன்றி . இதுவரை நூலாக என் படைப்புகள் வந்ததில்லை கூடியவிரைவில் வரும் நன்றி

Comments are closed.