மௌனமாய் உன் முன்னே(1)

எந்த நொடியில்
வண்ணத்துப் பூச்சிக்கு
சிறகுகள் முளைத்தது
தேனெடுக்க

எந்த நொடியில்
குயிலுக்குள்
சோகம் எழும்பியது
கீதமிசைக்க

எந்த நொடியில்
மனம் இசைந்தது
காதல் பிறக்க

எதற்குமே பதிலில்லை
சிந்திக்கவும் இல்லை
மௌனத்தில்
ஆழ்ந்திருக்கும்
மனம்

எந்த நொடியில்
மீண்டும் சந்திப்போம்
தவிப்பை மறைக்கும்
காதலால் கண்கள்

தொடரும்

(மௌனமாய் உன் முன்னே -மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author