மௌனமாய் உன் முன்னே(2)

இயற்கையாய் அதிசயங்கள்
நடக்கத்தான் செய்கின்றன

பாலையில்
திடீரெனத் தோன்றும்
கானல் நீர்ச் சோலை

மழை பொழிகையில்
சரேலென பொழியும்
ஆலங்கட்டி மழை

மலையில் சட்டென
மறையும்
மாலைச் சூரியனின்
வர்ணக் குழம்பு ஓவியம்

மாலையில்
ஒப்பந்தமே செய்துகொள்ளாது
வந்துவிட்ட
எனக்கே எனக்கான
உனது வருகை

இயற்கை அனைத்தையும்
முன்பே உணர்ந்து கொள்கிறது
பூகம்பமோ மழையோ
எதுவாயினும்

தொடரும்

(மௌனமாய் உன் முன்னே -மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author