வாழ்வின் ஆதாரம்

உடனே பகிர வேண்டும்
எதுவும் ரகசியமில்லை
இன்று சொல்லாமல் போனால்
மறுநாள் பார்ப்பதற்குள்
தலை வெடித்து விடும்
மன்னிப்பு கேட்கத் தூண்டும்
எனக்கும் உனக்கும் இடையே
எப்போதும் ஒளிவு மறைவில்லை
என்பதில்
ஆத்மாவின் சீரான சுவாசம்!
ஆனால்..
நீ சொல்லாமல்
மறைத்த விஷயம்
இன்னொரு நபர் மூலம்
தெரிய வந்த அந்த நிமிடம்
பிரபஞ்சம் எனக்குள் ஏன்
வெறிச்சென்று போனது?
அவரவருக்கென்று
தனியே சில ரகசியங்கள்
உண்டென்று எனக்கு நானே
சொல்லிக் கொண்ட சமாதானங்கள்
ஏன் அர்த்தமற்றதாய் தோன்றுகிறது?
எப்போதும் எதையும் மறைக்காத
என் குணம்தான் என் எதிரியா?
எனக்கு நீ நெருக்கம்..
உனக்கு நான் அந்நியம்
சில நேரங்களில்..
சில விஷயங்களில்..
பேசியதில் புரியாத சில..
பேசாததில் புரிவதுதான் வாழ்க்கை!

About The Author

1 Comment

Comments are closed.