விமானப்பயணம்

வியர்த்து வந்த பின்
சன்னலோரப் பயணம்..

சன்னல் கம்பி பட்டு
முகத்தில் தெறிக்கும் மழைத் துளி..

மெல்லியதாக கண் கூசும்
சூரியன்…

ஐந்து ரூபாய் தேநீர்..

காதலியோடு ஊர்ப் பயணம்

அடிக்கடி முகத்தில் படும்
அவள் துப்பட்டா..

காரணமில்லாமல் நம்மைப்
பார்த்து சிரிக்கும் குழந்தை..

இப்படி ஒன்று கூட இல்லாத
விமானப் பயணம் எப்படி இருந்தது
என்றவர்களிடம்
"நல்லா இருந்தது"
என்று பொய் சொன்னேன்

About The Author