விரல் தொட்ட வானம் (22) -வார்த்தைகள்

வார்த்தைகள்

வார்த்தைகளால்
நிரம்பிக் கிடக்கின்றன
எண்ணங்கள்.
உதிர்க்க வேண்டியதை
தேடித் தேடி எடுக்கிறேன்
முற்றினதாய் இல்லாத
பிஞ்சுக் காய்கறிகளைத்
தேர்வு செய்வதைப் போல.
எண்ணங்களின் வெப்பம்
வார்த்தைகளின் தேடலில்
களைப்பு ஏற்பட வைக்கிறது.
பெருமூச்சாய்
காற்றில் ஆவியாகிறது.
மீண்டும்
உறவுகளுடன் இணைக்கவும்
காயப்படுத்தாமலும்
இருக்கக்கூடிய வார்த்தைக்கு
மௌனம்தான் பெயர் என உணர்த்தியது
உள்ளே கிடக்கிற
ஒவ்வொரு வார்த்தையும்!

உணராதவர்கள்

தான் விட்டெறிந்த
கல்லை விழுங்கிய குளம்
வளையங்களை
உருவாக்குமென
எதிர்பார்க்கிறார்கள்
உருவாகும் வளையமே
சிறைப்படுத்தும்
என்பதை உணராதவர்கள்!

–தொட்டுத் தொடரும்…

About The Author