விரல் தொட்ட வானம் (28)

காட்டுக்குள்ளே திருவிழா
வரப்போகும் தேதியை
அறிவித்து விட்டார்
வனவிலங்கு அதிகாரி.
இப்போதே
அடித்துக் கொள்ளத்
தொடங்கிவிட்டன
நாய்களும்
நரிகளும்
மனிதர்களின்
ஆள்காட்டி விரலுக்காக!

******

எங்கு சென்றாலும்
அடுக்களை தேடும்
ருசி கண்ட பூனை!

********

காய்க்காத மரமும்
நீர்ப் பழங்கள் உதிர்க்கும்
மழை நாளில்!

–தொட்டுத் தொடரும்…

About The Author