விரல் தொட்ட வானம்

தனிமை நிலம்
நீட்டிப் பரந்து வெப்பத்தில் புரளும்
என் நிலத்தின் மீது
விழுந்து மினுமினுத்தது
உன் காதலின்
ஒரு துளி.
துளி
துளித் துளியாய்…
துளித் துளி
தொடர் மழையானதில்
வறண்டிருந்த அதன் உடலெங்கும்
நீரோட்டம்.
இப்போது
பூக்களின் துணையோடு
தரிசாய்க் கிடந்தது தனிமை நிலம்.

About The Author