வெறுமை

உறங்கும் அலைகளுடன்
உறைந்த சமுத்திரம்
கடல் பறவைகள்
வானில் கரைந்து விட்டன
பறவைகள் கொத்தும்
ஒரு பிளந்த சூரியன்
மூப்பும் மரணாதிகளும்
கிளைகளில் படர
அடிவயிற்றில்
நெளியும் வேர்கள்.

About The Author