ஷாலினி கவிதைகள் (2)

தன்னடக்கம்

தினம் உதித்து
தினம் வீழும்
கதிரவன் ஆற்றலில்
மாற்றமில்லை
எனினும்
மனிதன் மட்டும்
உதித்தாலும் வீழ்ந்தாலும்
நிறம் மாறுவதேன் ?

கவலை

கவலை –
சுண்ணக் கோல் வயதில்
நொடியில் கரைந்து,
எழுதுகோல் வயதில்
அலைகளாக எழுந்து, மடிந்து,
மைக் கோல் வயதில் மட்டும்
மலையாக உறைந்திட்டது
ஏனோ….
விடை அறியாமல்
குழந்தைப் பருவம்
திரும்பத் துடிக்கும் மனது

About The Author