• Sorry, this product cannot be purchased.
50_saatchiyaaga

$5

தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து தமிழ் சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதிவருகிறார் நட்சத்ரன். கவிதைகள் அவருக்கும் இந்த இருத்தலுக்குமான நேரடி உரையாடலாய் அமைவதாகக் குறிப்பிடும் இவரது பெரும்பாலான கவிதைகள், தன்வயமானவை. தமக்குத்தானே ஒரு உள்தேடலை நிகழ்த்துபவை. தன்னைக் கடந்துசெல்லும் அதிநுண்ணிய அனுபவங்களை முடிந்தவரை ஒரு சாட்சியாக நின்று பார்த்து கூர்ந்துநோக்கி அதை எழுத்துக்களைக் கொண்டும் வார்த்தைகளைக் கொண்டும் கட்டமைக்கும் இவர், கவிதைகள் தன்ழியே கையில் பிடிபடாத மேகத்தைப்போல கடந்துசெல்வதாயும், அதை எப்படியாவது கையில் பிடித்துத் தேக்கிவிட தான் துடிப்பதாயும் சொல்கிறார். கவிதை தன்னுள் கருக்கொண்டு அதை எழுதும் கணத்தில் எழும் ஒரு தியானமயமான சுகத்தை அனுபவிக்க வேண்டி அவை தன்னைக் கடந்து செல்வதற்காக எப்போதும் ஒற்றைக்காலில் நின்று கவனித்தவாறிருக்கிறார்- ஒரு மெளன சாட்சியாய். நட்சத்ரனின் வெளிவந்த, வெளிவராத 100-க்கும் மேற்பட்ட குறுங்கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

Quantity

SKU: e9d1ebf6193d.

Product Description

Natchathran began his writing career in small magazines in the early nineties. Most of his poems are set in the theme of a conversation between himself and the very existence of time. They are captivating, and explores the self for certain things. He says he tried hard to catch the words and make a lyric, and the words wander like a cloud which is impossible to hold in hands. He pens the minute experiences he gets from the perspective of an observer. He cherishes every moment when he is about to write down a poem and he feels like meditating in peace. This assortment is a good collection of a hundred poems, both published and unpublished earlier. (தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து தமிழ் சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதிவருகிறார் நட்சத்ரன். கவிதைகள் அவருக்கும் இந்த இருத்தலுக்குமான நேரடி உரையாடலாய் அமைவதாகக் குறிப்பிடும் இவரது பெரும்பாலான கவிதைகள், தன்வயமானவை. தமக்குத்தானே ஒரு உள்தேடலை நிகழ்த்துபவை. தன்னைக் கடந்துசெல்லும் அதிநுண்ணிய அனுபவங்களை முடிந்தவரை ஒரு சாட்சியாக நின்று பார்த்து கூர்ந்துநோக்கி அதை எழுத்துக்களைக் கொண்டும் வார்த்தைகளைக் கொண்டும் கட்டமைக்கும் இவர், கவிதைகள் தன்ழியே கையில் பிடிபடாத மேகத்தைப்போல கடந்துசெல்வதாயும், அதை எப்படியாவது கையில் பிடித்துத் தேக்கிவிட தான் துடிப்பதாயும் சொல்கிறார். கவிதை தன்னுள் கருக்கொண்டு அதை எழுதும் கணத்தில் எழும் ஒரு தியானமயமான சுகத்தை அனுபவிக்க வேண்டி அவை தன்னைக் கடந்து செல்வதற்காக எப்போதும் ஒற்றைக்காலில் நின்று கவனித்தவாறிருக்கிறார்- ஒரு மெளன சாட்சியாய். நட்சத்ரனின் வெளிவந்த, வெளிவராத 100-க்கும் மேற்பட்ட குறுங்கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.)

Additional Information

ebookauthor

நட்சத்ரன்