பாபா பதில்கள்

கூவிக் கொள்ளும் காலம்

விண்ணோரும் மண்ணோரும் ஓத உதவா ஒரு தோழன், ஆகாசத்தில், பூமியில் எங்கு பார்த்தாலும் அப்படி ஒரு friend கிடையாது என்று சொல்கிற பக்குவத்தில் நாம் இருக்க வேண்டுமென்றால் வாழ்கிற காலத்தில் கடவுளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். நம! என்னெல்லாம் கடமை, நமக்கெல்லாம் ஒரு duty இருக்கிறதாம். அது என்ன? ஓம் நமோ, நம.

நம என்னனெல்லாம் கடமை யாருக்கு வருமென்றால் – "கூவிக் கொள்ளும் காலத்தே", யாருக்கு கூவிக் கொள்ளும் காலம் – "சுமந்து மாமலர் தூபம்", யாரெல்லாம் பூ தூவி கடவுளை வழிபட்டார்களோ, யாரெல்லாம் ஊதுபத்தி கற்பூரமெல்லாம் காட்டினார்களோ- "சுமந்து மாமலர் தூபம் சுமந்தார்க்கே கூவிக் கொள்ளும் காலம்".
 
கூவிக் கொள்ளும் காலமென்றால் என்ன – அதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நீ போகிறாய். வரிசையில் போகும் போது நீ கோவிந்தா கோவிந்தா என்று கத்துவாய். பழனி ஆண்டவன் கோவிலில் லைனில் நிற்கும் போது அரோகரா, அரோகரா என்று கத்துவாய். இது நீ கூவுவது. நீ லைனில் போகும் போது அங்கு சிலையாக நிற்கும் கடவுள், "என்ன சுப்பிரமணி" என்று உன்னைப் பார்த்து கேட்க வேண்டும். அவர் உன்னைக் கூவ வேண்டும். நீ கூவுகிறது பெரிய விஷயமில்லை. "கூவிக் கொள்ளும் காலம்" – எவ்வளவு அழகான வார்த்தைகள் பாரு. முருகர் உன்னைப் பார்த்து, ‘என்னப்பா வெங்கடேசா நல்லா இருக்கியா’ என்று கேட்கணும்.

About The Author