மந்திகளின் ராஜ்யம்

கிளைக்குக் கிளை தாவித்திரிகின்றன
மந்திகள்
மந்திகளின் குரு
மந்திகளின் நடத்தைவிதிகள் பற்றி
விடாது போதித்தபடியிருக்கிறார்

கட்டுப்படுத்த இயலாததென
மனிதர்களால் வர்ணிக்கப்படும்
மந்திகளின் நடத்தையை
மாற்றியே தீருவதென
வாலால் அடித்து சத்தியம் செய்கிறார்
மாங்கிளையில் வீற்றிருந்த மந்தி ராஜா

மனிதர்களின் தாவல்களுக்கு
நம்மையே உதாரணம் காட்டுவது
குலத்துக்கு இழுக்கென
‘கர்ர்’ரிக்கிறாள் மந்திராணி
பேனைச் சவைத்தபடி.

குரங்குகளால்
குரங்குகளுக்காக
உருவாக்கப்பட்ட ராஜ்யத்தில்
இனி தாவலுக்கு இடமில்லை என்ற சட்டம்
உடனடியாக அமலுக்கு வர,

எல்லாக் குரங்குகளும்
மரம்விட்டு மரம்தாவி
அதை ஆமோதிக்கின்றன.

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author