அதிரூபவதிக்கு… (13)

உனக்குப்
பரிசுப்பொருளாகத் தர
என்னிடம்
எதுவும் இல்லை…
என் பரிசுத்த இதயத்தைத் தவிர.
……………………………………
வருங்காலத்தில்
என்ன ஆகப்போகிறாய்
ஆசையுடன் கேட்கிறேன்…
நம் குழந்தைகளுக்கு
அம்மாவாகப் போகிறேன் என்று
வெட்கத்துடன் சொல்கிறாய்.
…………………………………..
குழந்தைகளைக்
கொஞ்சிக் கொண்டிருக்கிறாய்…
நீ
கொஞ்சுவதற்காகவே
நான்
கொஞ்சம் கொஞ்சமாகக்
குழந்தையாக மாறிக்கொண்டிருக்கிறேன்!
…………………………………………………………………….…
உன்
ஓரப்பார்வைகளில்
ஓராயிரம் கவிதைகளைக்
களவாடப் பிறந்தவன்
நான்!

About The Author