அதீதாவுக்கு

20.

உன் அனைத்து உடுப்புகளையும் கடந்து
கணையாகிப்பாய்கிறதென்
உயிர்த்தீ
உன் பேரழகின்
அதீதப்பரப்பில்.

21.

யுகாந்திரங்களை
க்ஷணத்தில் மறைத்து
விரிகிறாய் மலர்ந்து
என் மோனவெளியின்
ஒளிப்பூவாய்

22.

வருகிறாய் போல வந்து
போவதுபோல போகிறாய் நித்தம்
வருகிறாயா போகிறாயா
என்பதை மட்டும்
வைத்திருக்கிறாய் இன்னும்
ரகசியமாய்.

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author

1 Comment

  1. nadaraj

    ம்… பார்த்து காதல் நெருப்பு சுட்டால் ஆறுவது கிடையாது

Comments are closed.