கவின் குறு நூறு-3

7

வடைக் கதை
கேட்டு முடிந்ததும் கவின்
கேட்டான் பாட்டியிடம்
‘திருட்டுக் காக்கையை
ஏமாற்றிய நரி மட்டும்
ரொம்ப ஒழுங்கோ?’

8

எதைக் கொடுத்தும்
சமாதானம் ஆகாது
அழுத கவின்
சமாதானம் ஆனான்
பாட்டியும் சேர்ந்து அழுதபோது.

9

அம்மாவா? அப்பாவா?
யார் பிடிக்கும்?
தாத்தாவா? பாட்டியா?
யார் பிடிக்கும்?
மாமாவா? அத்தையா?
யார் பிடிக்கும்?
குழந்தை கவின்
பதில் சொல்லவில்லை;
இப்படிக் கேள்வி கேட்காத
என்னை அவனுக்கு அதிகம் பிடிக்கும் என்றது
அவன் மடியிலிருந்த பொம்மை.

About The Author