நினைவு ஊர்வலம்

நீண்டதொரு ஊர்வலமென்
நினைவென்னும் வீதியிலே
ஆண்டுபல பின்னோக்கி
அணிவகுத்துச் செல்கிறது.

மூண்டணைந்த வேட்கைகள்
முளைத்துதிர்த்த சொப்பனங்கள்
தோண்டி மனத்தடியில்
தொல்பொருளாய்ப் புதைத்தனவே

மாண்டெரிந்த சம்பவங்கள்
மயானச் சாம்பலிலே
மீண்டுமுயிர் பெற்றுடலில்
மின்சாரம் பாய்கிறது.

தாண்டிவந்த வயதையெல்லாம்
தாவும் மனப்புரவி
ஈண்டு சுமந்துவரும்
இளம்பருவக் காதலியின்

வாட்கண்ணில் பிறைநுதலில்
வாலிபத்தின் வசந்தருது
மீள்கிறது; காலத்தேர்
மிதித்துருண்ட சோபனங்கள்
ஒன்றொன்றாய்த் தலைதூக்கும்
உள்ளத்துப் பலகணியில்
நின்றுநினை வூர்வலத்தின்
நிகழ்ச்சிநிரல் நோக்குகையில்

About The Author

1 Comment

  1. P.BALAKRISHNAN

    ENNIP PAARTTHITTAAL ELAMAIYORU INBAMTHAAN. KANNIL THERIYUM ANTHAK KAATCHI ELLAAM SUGA NINAIVE!-VOVVORUVAR VAAZHVILUM VASANTHANGAL VUNDU. MUTHUMAIYIL ATHAN NINAIVU ITHAME. Nanru.-Arima Elangkannan

Comments are closed.