பாபா பதில்கள்

Q. குறிப்பிட்ட பலன்களுக்காக குறிப்பிட்ட தேவதைகளைப் பிரார்த்திப்பவர்கள் அந்தந்த பலன்களை அடைகிறார்கள். இப்படி இருக்கும் போது பாபா சொல்லும், ‘கடவுள் ஒருவர் தான்’ என்பது வேறுபடுகிறதே?

ஒரே கடவுள்தான் — வெவ்வேறு காலக்கட்டங்களில் அந்த எனர்ஜியை யாரெல்லாம் கிரகித்துக் கொண்டு இந்த உலகத்திற்கு உபயோகமாக இருந்தார்களோ அவர்களை மக்கள் வழிபட்டிருக்கிறார்கள். இராமனும், புத்தனும், கிருஷ்ணனும், இயேசுவும் அந்த எனர்ஜியை வாங்கி ஏதாவது ஒரு வகையில் மக்களுக்குப் பயன்பட்டவர்கள். ‘மாநிலம் பயனுற வாழ்வதற்கே ஒரு வல்லமை தாராயோ’ என்கிற ஒரு நிலை அது. ‘ஊருக்கு உழைத்திடல் யோகம்’ என்று சொல்லக்கூடிய யோகநிலை. யார் அந்த நிலையை அடைந்தார்களோ அவர்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள்.

கம்ப்யூட்டரில் லட்சக்கணக்கான வெப்சைட்டுகள் இருக்கின்றன. அதில் இருக்கும் விஷயங்களும், அவற்றை சார்ந்தவைகளாகவும் உண்மையானதாகவும் இருக்கின்றன. அப்படி ஒரே ஒரு எனர்ஜியின் வேறு வேறு வெப்சைட்தான் இராமனும், கிருஷ்ணனும். உங்களுக்கு எந்த வகையான அறிவினை தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த குறிப்பிட்ட வெப்சைட்டுக்கு போகலாம்.

எப்படி கல்யாணத்திற்கு என்றால் மேட்ரிமோனியல் வெப்சைட்டுகள் இருக்கின்றன; ரியல் எஸ்டேட் என்றால் அதற்கானவை உள்ளன; சுற்றுப் பயணம் என்றால் அதற்கு தனியாக வைத்திருக்கிறார்கள்.

About The Author