புத்தாண்டே வருக !

வா.. ஒரு கை கொடு.
சூரியனை திசை மாற்றலாம்!
பிரதேசங்கள் எல்லாம்
இருட்டில்லாமல் செய்வோம்.

புதிய பூச்செடிகள்
உண்டாக்குவோம்.
குழந்தைகளின் குறுக்கே
நடக்காமல் இருப்போம்.

அறியாமை என்பது
குணப்படுத்த முடியாத
நோயல்ல..
கூடங்களை விட்டு கல்வியை
வெளிக் கொணர்ந்து நம்
கையகப்படுத்துவோம்.

நேசிப்பது சொல்லிப் பெறுவதல்லதான்.
பரவாயில்லை..
மறதி இயல்பான மாந்தருக்கு
வகுப்பெடுப்பொம்.

எதிர்கால இனிமை
கனவு கண்டால் சாத்தியம் என்று
எத்தனை நாளைக்குக்
கண் மூடி எதிர்பார்ப்பது?
கனவு காணவே அவசியமற்ற
நிகழ்காலப் புதுமைகளைப்
பொதுவுடமையாக்குவோம்.

இனி வருங்காலம்
அழகியலுக்கான கவிதைகளுக்காகவே!
புது விடியலுக்காக அல்ல.. என்பதை
இந்தப் புத்தாண்டின் இறுதிக்குள்ளாவது
நிறைவேற்றி விடுவோம்!
அடுத்த வருடம் பிறக்கும் தலைமுறை
"Archives" ல்தான்
பார்க்கவேண்டும்..
நாம் இதுவரை சேர்த்து வைத்த
தனி மனித அநாகரிகங்களை!

About The Author