ரிஷபன் கவிதைகள் (3)

பூக்கும்போது தெரியவில்லை..
பூஜைக்கா.. அல்லது
தெருவில் மரண வாசனையுடன்
இறைபடுவதற்கா..
ஆனாலும் பூக்கின்றன எப்போதும் ..
செடிகள்..

****

குழந்தைகள்
தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
கிடைத்து விடுகின்றது தவறாமல்
அவர்களுக்கான அன்பு.
யாராவது..
எங்கிருந்தாவது..
பெரியவர்கள்தான்
அல்லாடுகிறார்கள்.
வாழ்நாள் முழுவதும்..

About The Author