அமுத பானம்

இரத்த சோகையை போக்கும். பெரியவர்களின் சோர்வைப் போக்கும். சிறியவர்களின் வளர்ச்சிக்கு உதவும்.

தேவையான பொருட்கள்:

பேரீச்சம்பழம்-5
பசும்பால்-200 கிராம்,
பச்சைக் கற்பூரம்-சிறிது
தேன்-2 தேக்கரண்டி
ஏலப்பொடி-சிறிது
குங்குமப்பூ-சிறிது(தேவையானால்).

செய்முறை: ஐந்து பேரீச்சம்பழங்களை விதை நீக்கி அரைத்து காய்ச்சிய பசும்பாலில் கலந்து தேன், பச்சை கற்பூரம், ஏலப்பொடி, தேவையானால் சிறிது குங்குமப்பூ சேர்த்து பருகினால் இதற்கிணையான டானிக் இல்லை எனலாம். கலையிலும், மாலையிலும் பருகலாம்.

About The Author