இராசிபலன்கள் (20-9-2010முதல்26-9-2010வரை)

1.மேசம்:-

மேசராசி அன்பர்களே சூரியன் நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் தோல் மற்றும் ரத்த சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பேப்பர், பேனா, பென்சில் போன்ற எழுது பொருட்கள் போன்ற ஸ்டேஷனரி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள், அச்சுத்துறை சார்ந்த பொருட்கள் விற்பனையாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், தபால்தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள், காய்கறிகள், இலை மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். நெடு நாட்களாகப் பிரச்சனையில் இருந்த குடும்பச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரக் கூடிய காலமாகும். அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம். விபரீத எண்ணங்களை விட்டுக் காரியத்தைக் கவனிக்கவும். வேலை இல்லாதவர்களுக்கு வெகு நாட்களாக எதிர் பார்த்து இருந்த புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் காலமாகும். கண்களில் கவனமுடன் இருப்பது நல்லது. பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சமாளித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்படும் உடல் நிலை பாதிப்புகள் நீங்குவதற்காக மருத்துவத்திற்காக வெளியூர் பயணங்களை மேற் கொள்வீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து அன்ன தானம் செய்த வரவும்.

2.ரிசபம்:-

ரிசபராசி அன்பர்களே சூரியன் நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் மூளை நரம்பு எலும்பு போன்ற உபாதைகள் வந்து போகலாம். சூதாட்டம் போன்ற காரியங்களில் தலையிட்டு பொருள் இழப்பு ஏற்பட இருப்பதால் சூதாட்டங்களைத் தவிர்தல் நல்லதாகும். வீடுகளைப் புதுப்பித்துக் கட்டுவதற்காக பணச் செலவுகள் வந்து சேரும். பூர்வீக இடங்களை விட்டு மாறிச் செல்லத் திட்டம் போடுவீர்கள். ஆதரவு அற்ற ஏழைகளுக்காக உதவி செய்து அதனால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்த சுமூகமான உறவுகள் ஏற்படும். நண்பர்களால் வீண் விவாதங்களும் தொல்லைகளும் வந்து போகும். கட்டிட சம்பந்தமான செங்கல், மணல், கல் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள், அழகு கலைக் கூடங்களை நடத்துவோர்கள், சினிமா நாடகம் போன்ற துறை சார்ந்தவர்கள், ஆடு, மாடு, கார், லாரி போன்ற வாகனத் தொழிற் செய்வோர்கள், கலைக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆபரணங்கள் மற்றும் நவரத்தின வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். புதிய கூட்டுத் தொழில் முயற்சிகளை சற்று கால தாமதமாக தொடங்குவது நல்லது. எதிர்பாராமல் வட திசையில் இருந்து பொருள் வரவும், நல்ல செய்திகளும் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் முன் கோபத்தை தவிர்த்துப் பணியாற்றுதல் நல்லது. பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

3.மிதுனம்:-

மிதுனராசி அன்பர்களே புதன் நன்மை தரும் கிரகமாகும். தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகுவதோடு மருத்துவச் செலவுகள் ஏற்படும். யாத்திரையில் கவனமுடன் பயணம் செய்யவும். எதிர் பார்த்த பண உதவிகள் உறவினர்களால் கிடைக்கும். நீண்ட காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடு வந்து சேரும் காலமாகும். திருமணம் போன்ற சுப காரிய நிகழ்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள். தீர்த்த யாத்திரைகளுக்காக நீண்ட தூரப் பிரயாணங்களை மேற் கொள்வீர்கள். போட்டி லாட்டரி மூலமாகத் திடீர் தன வரவுகள் உண்டாகும். சொத்து சம்பந்தமாகிய வழக்கு விசயங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். பிள்ளைகளால் எதிர் பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. கம்பியூட்டர் சம்பந்தமாகியபொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், பழ வியாபாரிகள், பண விசயங்களுக்கான நீண்ட தூரப் பயணங்களைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள், அற நிலையத்துறை சார்ந்தவர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், உணவு தானிய வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். தீராத நாட் பட்ட நோய்களுக்கு விடை காணுவீர்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-சிவ ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்

4.கடகம்:-

கடகராசி அன்பர்களே ராகு நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர்களால் சில ஆதாயங்கள் வந்து சேருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. ரேஸ், லாட்டரி போன்ற சூதாட்ட சம்பந்தமான விசயங்களினால் பணம் கை விட்டுப் போக இருப்பதால் சூதாட்டங்களைத் தவிர்ப்பது நல்லதாகும். சம்பந்தம் இல்லாத அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு மனக் கவலை அடையாதீர்கள். குல தெய்வ ஆலயங்களைத் திருத்தி கட்டப் போட்ட திட்டங்களில் சிறிய தடைகளின் பேரில் வெற்றி அடைவீர்கள். சேர் மார்க்கெட், கணிதம், எழுத்துத் துறை சார்ந்தவர்கள், அரசியல் வாதிகள், அரசு உயர் பதவிகள் வகிப்பவர்கள், நெருப்பு சம்பந்தமான உணவு பொருட்களின் வியாபாரிகள், நிலக்கரி மற்றும் விறகு பொன்ற எரி பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் மிகவும் ஆதாயம் அடைவார்கள். முன் கோபத்தை தவிர்த்து அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. மற்றவர்களுக்காக ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். குல தெய்வ வழிபாடு செய்து வருவதலால் கிரக தோசங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் மற்றும் சொந்த பந்தங்களால் ஆதரவு இல்லை. பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-சிவ ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்த வரவும்.

5.சிம்மம்:-

சிம்மராசி அன்பர்களே சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வெளி நாடு செல்லுதல் போன்ற புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கண் காதுகளில் கவனமுடன் இருக்கவும். விபரீதமான எண்ணங்களை விட்டொழித்து காரியத்தில் கவனமாய் இருங்கள். சொத்து சம்பந்தமாகிய வழக்கு விசயத்தில் சாதகமான நல்ல முடிவுகளை எதிர் பார்க்கலாம். ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், இரும்பு, இயந்திரம் எண்ணைய் சம்பந்தமான வியாபாரிகள், பலசரக்கு தொழிற் செய்வோர்கள், பழைய இரும்பு பொருட்கள் மற்றும் கழிவுப் பொருட்களின் வியாபாரிகள், அலுவலகப் பணி உதவியாளர்கள், மிசினரி சம்பந்தமான உதிரி பாகங்களை ஏற்றுமதி இறக்குதி செய்வோர்கள், பெட்ரோல், டீசல், மண் எண்ணைய் போன்ற எரி பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் மிகவும் ஆதாயம் அடைவார்கள். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்.தேவையற்ற நண்பர்களின் தொடர்புகளால் பிரச்சனைகள் வர இருப்பதால் கவனமுடன் பழகுதல் நல்லதாகும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் மாறித் தேவையான பொருளாதாரம் வந்து சேரும். உடம்பில் முதுகு மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்து போகும். உற்றார் மற்றும் உறவினர்களின் எதிர் பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் எதிர் பாராத சிற் சில ஆதாயங்களை அடைவீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.

6.கன்னி:-

கன்னிராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். உத்தியோகத் துறையினருக்கு பணி இட மாற்றமும் பதவி உயர்வுகளும் வரக் கூடும். குல தெய்வ ஆலயங்களைப் புதுப்பிதலுக்கான முயற்சிகளில் நற்பெயர் பெறுவீர்கள். நாட் பட்ட பழைய கடன்கள் மீண்டும் தொல்லை தர வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக புதிய கட்டிடம் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரிய நிகழச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பு உண்டாகி அவர்களால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். திருமண தகவல் மையங்கள், வாகனங்களில் பணியாற்றுவோர்கள், அரசுத் துறையைச் சார்ந்த வழக்கறிஞர்கள், நெருப்பு சம்பந்தமான ஹோட்டல் தொழிற் செய்வோர்கள், அரசுத் துறை சார்ந்த மந்திரி பதவி வகிப்போர்கள்,வெளி நாட்டுத் தூதுவர்கள், ஜவுளி மற்றும் நூல் வியாபாரிகள் ஆகியோர்கள் மிகவும் நற்பலன் அடைவார்கள்.பெண்கள் சம்பந்தமான காதல் விசயத்தில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும்.குல தெய்வ வழிபாட்டிற்காகத் தொலை தூரப் பயணங்களை மேற் கொள்ள நேரும். மூத்த சகோதரர்களால் பொருட் செலவுகள் மற்றும் மன நிம்மதிக் குறைவுகள் ஏற்படலாம்.. பொதுவாக இது ஒரு சுமாரான நற் பலன் தரும் வாரமாகும்

இராசியான எண்:-1,2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு,மேற்கு
பரிகாரம்:-சிவன் மற்றும் அம்மன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

7.துலாம்:-

துலாம்ராசி அன்பர்களே வியாழன் நன்மை தரும் கிரகமாகும். விளையாட்டுத் துறைகளைச் சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுகள் கிடைக்கும், புதிய பெரிய மனிதர்களையும் அரசியல்வாதிகளையும் சந்திக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கும். நெருப்புத் தொழில், காவல்துறை, இராணுவம் சார்ந்தவர்கள், இணைய தளங்களை நடத்துபவர்கள், மின்சாரத்துறை சார்ந்தவர்கள், மின்சார சம்பந்தமான பொருட்களை விற்பனைகளைச் செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள். பொருளாதாரத்தில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காணப்படும். எதிர் பாராத நீண்ட தூரப் பயணங்களின் மூலம் மன நிறைவடைய வாய்ப்பு உள்ளது. திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். வராத கடன் கொடுத்துள்ள பணம் எதிர் பாராமல் திரும்பக் கிடைக்கும். வெகு தூரப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் சென்று வருவது நல்லது. பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நல்ல சூழ் நிலைகள் காணப்படும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் காரணமற்ற பிரச்சனைகள் வர இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிவப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-முருகன் வழிபாடு செய்து வரவும்.

8.விருச்சிகம்:-

விருச்சிகராசி அன்பர்களே சனி நன்மை தரும் கிரகமாகும். நீண்ட நாட்களாக தடை பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமண காரியங்களில் வெற்றி அடைவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள், பழைய இரும்பு வியாபாரிகள், சாயப் பவுடர் தொழிற் சாலைகளை நடத்துபவர்கள்,விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள், ஆசிரமவாசிகள், கழிவுப் பொருள்களின் வியாபாரிகள், கோர்ட்டுகளில் பணி செய்வோர்கள், தரகு மற்றும் வட்டித் தொழிற் செய்வோர்கள், மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள், அணு ஆராய்ச்சி செய்பவர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். உறவினர்களின் வரவால், பொருள் வரவும், மனச் சந்தோசமும் உண்டாகும். உடல் நிலையில் இருந்து வந்த நாட்பட்ட நோய்கள் நீங்கி மன நிம்மதி உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் இல்லை. பெண்கள் விசயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நன்று. புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத் துறையினர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவுகள் நிரம்ப உண்டாகும். விவசாயம் செய்வோர்களுக்கு நல்ல விளைச்சலும், லாபமும் கிடைக்கும். புதிய வீடுகளை வாங்கப் போட்ட திட்டங்களுக்காக வங்கிகளில் எதிர் பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கக் கூடிய காலமாகும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
புரிகாரம்:-அம்மன் மற்றும் பிதுர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

9.தனுசு:-

தனுசுராசி அன்பர்களே வியாழன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் தடை பட்டிருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். உடல் நிலையில் கண் காதுகளில் மிகவும் கவனமுடன் இருத்தல் நல்லதாகும். விட்டுப் போன கணவன், மனைவி உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. தண்ணீர், கூல்டிரிங்ஸ், திரவ சம்பந்தமான பொருள் வியாபாரிகள், பூஜைப் பொருள் வியாபாரிகள், மருந்து கம்பெனி நடத்துபவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஜவுளி, நூல் வியாபாரிகள், பூஜைப் பொருட்களின் வியாபாரிகள், கப்பல் பணி செய்பவர்கள், உப்பு உரவியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். நண்பர்களால் எதிர் பார்த்த ஆதாயம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்காக வங்கிகள் மூலம் நீண்ட காலமாக எதிர் பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. காதல் சம்பந்தமான விசயங்களில் பெண்களால் அவப் பெயர்கள் வரக் கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் பழகுதல் நல்லது. தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். பல காலமாகத் தீராத நோய்களுக்கு புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்கும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் எதிர் பாராத தன வரவு உண்டாகும். மகான்களின் நல்லாசிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிவப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-முருகன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

10.மகரம்:-

மகரராசி அன்பர்களே கேது நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்து வந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவில் விரிசல்களும் வீண் மனக் குழப்பங்களும் வந்து போகும். நீண்ட நாட்களாக வராத பணம் திரும்பக் கை வந்து சேரக் கூடிய காலமாகும். உறவினர்களால் வீண் பொருட் செலவுகள் உண்டாகும். மற்றவர்களை நம்பிப் பணம் பொருள் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அநாதைகளுக்கு உதவுவதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வெகு காலமாக நினைத்துக்கொண்டு இருந்த கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தொடங்கினால் மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிதாக வீடு, வாகனம் மற்றும் நில புலன்கள் வாங்க வாய்ப்பு உள்ள காலமாகும். உடல் நிலையில் வாயு மற்றும் வாதம் ஆகிய தொல்லைகள் வந்து போகும். யாத்திரைகளில் மிகுந்த கவனமுடன் சென்று வருதல் நல்லதாகும். திருமண விசயங்களுக்காக முயற்சி செய்யலாம். நெருப்பத் தொழில்கள் செய்வோர்கள், கேஸ், வெல்டிங் போன்ற வியாபாரிகள், காவல் துறை, ராணுவம் சார்ந்தவர்கள், தீயணைப்பு துறையைச் சேர்ந்தவர்கள், காரமான உணவுப் பொருள் வியாபாரிகள், நிலக்கரி வியாபாரம் செய்பவர்கள், விறகு வியாபாரிகள், மசால் பொடிகளை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

11.கும்பம்:-

கும்பராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். தந்தை, மகன் உறவில் சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடம்பில் வாயு மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்து போகும். குடும்பத்தில் தடை பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் வெகு காலமாக எதிர் பார்த்து இருந்து வந்த நல்ல முடிவுகள் கிடைக்கும். பொது நலக் காரியங்களுக்காக மிகுந்த அக்கறையுடன் செயல் பட்டு நற் பெயர், புகழ் எடுப்பீர்கள். சேர்மார்க்கெட் மற்றும் தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவது நல்லது. விவசாயம் செய்வோர்கள், அரசியல்வாதிகள், கலைத் துறையினர்கள், அணு ஆராய்ச்சித் துறையைச் சார்ந்தவர்கள், கழிவுப் பொருள்களின் வியாபாரிகள், அடிமைத் தொழிற் செய்வோர்கள், மீன், முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள், துப்புரவுப் பணிகளைச் செய்பவர்கள் ஆகியோர்கள் நல்ல ஆதாயங்களை அடைவார்கள். கொடுக்க வேண்டிய பழைய கடன்களைக் கொடுத்து பதிய கடன்களை வாங்கத் திட்டம் போடுவீர்கள்.குடும்பச் சொத்துக்கள் போன்ற விசயத்தில் நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம். உடம்பில் உஷ்ணம், சுரம் போன்ற உபாதைகள் வந்து போகும். வங்கிகளால் எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிவப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-விநாயகர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

12.மீனம்:-

மீனராசி அன்பர்களே சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். வீடு நிலம் வாங்குவது போன்ற முயற்சிகளில் அரசு சம்பந்தமாக எதிர் பார்த்து வந்த உதவித் தொகைகள் கிடைக்கும். சம்பந்தம் இல்லாத நபர்களால் எதிர் பாராத தன வரவுகள் உண்டாகும். வீட்டைத் திருத்திக் கட்டுவதில் மிகுந்த அக்கறையுடன் திட்டம் போடுவீர்கள். யாத்திரையில் மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வருவது நல்லதாகும். உற்றார், உறவினர்களின் வருகையால் பொருட் செலவுகள் உண்டாகலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் செய்யாத குற்றங்களுக்காக காரணமற்ற வீண் பிரச்சனைகள் வந்து சேரும் என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும். பூ, பழம், பூஜைப் பொருள் வியாபாரிகள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், கம்பியூட்டர் துறையை சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்வோர்கள், அற நிலையத் துறை சார்ந்தவர்கள், அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள், மடாதிபதிகள், கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர்கள் மிகவும் நற் பலன்களை அடைய வாய்ப்புகள் உள்ளது. கணவன், மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். காதல் விசயத்தில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது. சொத்து சம்பந்தமாகிய வழக்கு விசயங்களில் எதிர் பார்த்த முடிவுகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

***************************************************************

Gnanayohi Dr. P. Esakki, I. B. A. M. , R. M. P. , D. I. S. M
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627 759
Tirunelveli District, Tamil Nadu, India.
Phone : 04633-243029,
Mobile: 98425-10578, 98425-29691,
Fax: 04633 -240390
Website :- www. gnanayohi. com

About The Author