இராசிபலன்கள் (9-8-2010 முதல் 15-8-2010வரை)

1.மேசம்:-

மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் இன்னும் சற்று நீடிக்கும். அழுகல் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், மத போதகர்கள், மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள், பழைய பேப்பர், பழைய இரும்புப் பொருட்கள் மற்றும் பழைய பிளாஷ்டிக் சம்பந்தமான பொருட்களை வாங்கி விற்பனை செய்வோர்கள் ஆகியோர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைச் செய்யும் காலமாகும். கணவன் மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். விட்டுப் போன கணவன் மனைவி உறவுகளில் இருந்த மனக் கசப்புகள் நீங்கி மீண்டும் ஒன்று சேருவார்கள். பூமி நிலம் சம்பந்தமான வழக்குகள் மற்றும் பிற வழக்குகளில் இருந்து விடுதலை கிடைக்கும் காலமாகும்.சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுத் தொண்டுகளில் கவனமுடன் பணி ஆற்றுவது சிறந்தது. குழந்தைகளுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்கும் காலமாகும். குடும்பத்தில் காரணமில்லாத மனக் கசப்புகளும் மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவது நல்லது. குடும்பச் சொத்து விசயங்களில் வழக்கு சம்பந்தமான முயற்சிகளைச் சற்று தள்ளி போடுதல் உகந்ததாகும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் விநாயகர் ஆலய வழிபாடு செய்து வரவும்.

2.ரிசபம்:-

ரிசபராசி அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். பழைய கொடுக்க வேண்டிய கடன்களால் மீண்டும் தொல்லைகள் வந்து சேரும். சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. கொடுக்கல், வாங்கல் தொழிற் செய்பவர்கள் புதிய கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். கண், காதுகளில் கவனமுடன் இருக்கவும். சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலம் பொருள் வரவுகள் உண்டாகும். ரேஸ், லாட்டரி போன்ற சூதாட்டங்களில் ஈடுபட்டு பணம் மற்றும் பொருட்களை ஏமாறாமல் இருக்கவும். மாணவர்கள் கல்வியில் மிகவும் கவனமுடன் பயின்று வருதல் நல்லதாகும். யாத்திரையில் வாகனங்களில் கவனமுடன் பயணம் செய்யவும். உடம்பில் கண் மற்றும் காது முகங்களில் சிற்சில உபாதைகள் வந்து போகும். இதுநாள் வரையில் தடைபட்டு வந்த காரியங்களை மனத் தைரியமுடன் சற்று பிரயாசையுடன் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மற்றவர்களை நம்பிப் பணம் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். புதிய வீடு, வாகனங்களை வாங்க வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். சகோதர சகோதரிகளால் சிற்சில நன்மைகள் வந்து சேரும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

3.மிதுனம்:-

மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். வெளி நாடுகள் சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். கணவன், மனைவி உறவுகளில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லதாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். வங்கிகளின் மூலமாக எதிர்பார்த்து இருந்து எதிர்பார்த்து இருந்த கடன் உதவித் தொகைகள கிடைப்பதில் இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். சொத்து சம்பந்தமான விசயங்களில் சாதகமான நல்லமுடிவுகள் பெரியவர்களின் தலையிடுதலால் கிடைக்கும். தீராத நாட் பட்ட நோய்களுக்காக மருத்துவச் செலவுகளைச் செய்யும் பொருட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள். கடன் கொடுத்து இருந்த நீண்ட காலமாக வரரத பணம் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும். காதல் விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல முடிவுகள் வந்து சேரும். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். யாத்திரையில் கவனமுடன் சென்று வருதல் சிறந்ததாகும். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். பொதுவாக இது ஒரு மன ஆறுதலைத் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிவப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

4.கடகம்:-

கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பொதுக் காரியங்களில் தலையிட்டு நற் பெயர், புகழ் அடைய வாய்ப்பு உள்ள காலமாகும். பூ, பழம், சிற்றுண்டி உணவுப் பொருட்களின் வியாபாரிகள், வாசனைத் திரவப் பொருட்களின் வியாபாரிகள், ஆலயப் பணிகளைச் செய்வோர்கள், அறநிலையத் துறைகளை சார்ந்த பணியாளர்கள், மடாதிபதிகள், பூஜைப் பொருட்களின் வியாபாரிகள், அநாதை இல்லங்களை நடத்துவோர்கள், தாய், சேய் நல விடுதிப் பணி செய்வோர்கள், பொதுப் பணித் துறைகளைச் சார்நதவர்கள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள். கொடுக்கல், வாங்கல் சம்பந்தம் ஆகிய பிரச்சனைகளில் உறவினர்களின் தலையிடுதலால் ஓரளவு மன நிம்மதி அடைவீர்கள். மன தைரியமுடன் எடுத்த காரியங்களைச் சற்று முயற்சியுடன் செய்து முடிப்பீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழில்களைத் தொடங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தீராத நோய்கள் தீர வேண்டி நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. தாயின் உடல் பாதிப்புக்களால் மன உழைச்சலும் பொருட் செலவுகளும் உண்டாகலாம். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

5.சிம்மம்:-

சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். புதிய வீடு, நிலம் வாங்குவதற்காகப் போட்டிருந்த திட்டங்களில் சற்று பின்னடைவு ஏற்படலாம். குடும்பத்தில் காரணமற்ற குழப்பங்களும் மன சஞ்சலமும் ஏற்பட இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லதாகும். வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் சிக்கலை விலைக்கு வாங்காதீர்கள். தந்தை, மகன் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டு விலகும். வங்கிகளால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும் காலமாகும். ஒரு சிலருக்கு வீடு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்ய எண்ணுவீர்கள். உடல் நிலையில் நரம்பு, எலும்பு போன்ற உபாதைகளின் மூலம் சிற்சில பாதிப்புகள் வந்து போகும். வெகு காலமாகப் பிரச்சனைகளில் இருந்து வந்த பூர்வீகச் சொத்துக்கள் சட்டப் பூர்வமாக கைக்கு வந்து சேரும். விவசாயம் செய்பவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. குழந்தைகளுக்காக ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்று குறையும். செய்யாத குற்றங்களுக்காக அவப்பெயர் ஏற்பட இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். சிறு தின்பண்ட வியாபாரிகள், சமையற் கல்லூரிகள் நடத்துபவர்கள் இவற்றில் பணி புரிபவர்கள், அரசு உயர் பதவிகளை வகிப்பவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பேசிப் பழகவும். பழுது பட்ட ஆலயப் பணிகளில் பங்கு கொண்டு நற் பெயர் புகழ் அடைய வாய்ப்பு உள்ளது. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம் ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

6.கன்னி:-

கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். வங்கிகளில் இருந்து எதிர் பார்த்த உதவித் தொகைகள் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். கணவன், மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். தபால் தந்தித் துறை சார்ந்தவர்கள், அச்சுத் தொழிற் செய்வோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசை அமைப்பாளர்கள், டிராவல்ஸ் போன்ற நிறுவனங்களை நடத்துவோர்கள், பத்திரிக்கை துறை சார்ந்தவர்கள், புத்தக வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவீர்கள். சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுப் பணிகளில் பங்கு கொண்டு மன நிம்மதி அடைவீர்கள். பயணங்களின் மிகுந்த கவனமுடன் இருக்கவும். வங்கிகளின் மூலம் எதிர் பார்த்து இருந்த கடன் உதவி தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் தேவையில்லாத மன சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. நண்பர்களுடன் பணப் பிரச்சனைகள் சம்பந்தமாக மனக் கசப்புகள் ஏற்படலாம். குடும்பத்தில் மருத்துவச் செலவுகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். வடமேற்குத் திசையில் இருந்து நற்செய்திகள் வந்து சேரும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

7.துலாம்:-

துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கோர்ட் வழக்கு விசயங்களில் நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும்.கட்டிடம், பூமி, நில புலன்கள், செங்கல், மணல், கல், சிமிண்ட் போன்ற வியாபாரிகள், கலைத்துறை சார்ந்தவர்கள், கலைஞர்கள், கலைக் கல்லூரி சார்ந்த மாணவர்கள் ஆகியோர்கள், அழகு சாதனப் பொருட்களின் வியாபாரிகள், இசைக் கலைஞர்கள், திருமண மண்டபங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள். அநாதைச் சிறுவர்களுக்கு உதவுவதில் மன நிறைவை அடைவீர்கள். நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வெகு தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். வராத பணம் மற்றும் பொருட்கள் பெரிய மனிதர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் நினைத்த இடத்திற்கு பணி இட மாற்றமும் ஏற்படலாம். வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது. பெண்களிடம் கவனமாகப் பேசிப்பழகுவதால் வர இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத் தகவல் மையங்கள் மற்றும் நண்பர்களின் உதவிகளால் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

8.விருச்சிகம்:-

விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். யாத்திரையில் மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வரவும். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் வந்து போகும். வெகு நாட்களாக காணாமல் போன பொருட்கள் காவல் துறையினர்களின் உதவிகளால் திரும்பக் கிடைக்கும். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் நிம்மதி உண்டாகும். உடல் நிலையில் கண் காதுகளில் கவனம் தேவை. மஹான்களின் தரிசனங்களால் மன நிம்மதி ஏற்படும். புதிய கடன்களை வாங்கினால் திருப்பி செலுத்த இயலாமற் போக வாய்ப்பு உள்ளதால் கடன் வாங்குவதை தவிர்க்கவும். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகளும் மருத்துவ செலவுகளும் உண்டாகலாம். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவது நன்மையைத் தரும். இரும்பு, இயந்திரம், கம்பியூட்டர், மின்சாரப் பொருட்களின் வியாபாரிகள் மற்றும் இவைகளில் பணி புரிவோர்கள், கமிசன், தரகு, ஏஜன்சி போன்ற தொழிற் செய்வோர்கள், சேர் மார்க்கெட் தொழிலில் ஈடுபடுவோர்கள், இரசாயனம் மற்றும் மூலிகை சம்பந்தமான ஆராய்ச்சிகளை செய்வோர்கள், தோல் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், பலசரக்கு, எண்ணைய், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் வியாபாரிகள், இன்சினியரிங் துறை சார்ந்தவர்கள், விசைத்தறி போன்ற ஆலை அதிபர்கள், ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசயியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் ஆஞ்சனேயர் மற்றும் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்

9.தனுசு:-

தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய விவசாயங்களின் மூலம் எதிர்பாராத நல்ல லாபம் அடைவீர்கள். தண்ணீர், கூல்டிரிங்ஸ் மற்றும் திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், உப்பு வியாபாரிகள், கடல் வளத்துறை சார்ந்தவர்கள், கப்பல்பணிகளைச் செய்வோர்கள், பூஜை பொருட்களின் வியாபாரிகள், மீன் பிடித் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் மிகுலாபம் அடையக்கூடிய காலமாகும். காதல் சம்பந்தமான விசயங்களுக்காக வீண் பொருட் செலவுகள் செய்து ஏமாற்றம் அடையாதீர்கள். உடம்பில் உஷ்ணம் மற்றும் சுரம் போன்ற உபாதைகள் வந்து போகலாம். புதிய தொழிற் செய்வதற்கான முயற்சிகளில் வங்கிகளில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் மன திருப்தி அடைவீர்கள். விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்குவதன் மூலம் சில மனக் கவலைகள் வந்து நீங்கும். குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக வெகு தூர உல்லாசப் பயணங்களை மேற் கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். திருடு பொன பொருட்கள் மற்றும் வாகனங்கள் காவல் துறையினரின் உதவியால் திரும்பக் கிடைக்கும். தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும். பொதுவாக இது ஒரு மன நிம்மதி நிறைந்த வாரமாகும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

10.மகரம்:-

மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். வெளி நாடு சென்று வருதல் சம்பந்தமான ஏஜன்சி தொழிற்செய்வோர் கவனமுடன் செயல் படவும். மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள், பழைய இரும்புப் பொருட்கள், பழைய பேப்பர் மற்றும் பழைய பிளாஷ்டிக் சம்பந்தமான பொருட்களை வாங்கி விற்பனை செய்வோர்கள், அழுகல் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், மத போதகர்கள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள். பொருளாதாரத்தில் இது வரையில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி மன நிம்மதியும் சந்தோசமும் அடைவீர்கள். காதல் போன்ற பெண்களின் விசயங்களில் மற்றவர்களின் உதவிகள் கிடைக்கும். இது வரையில் நெருக்கடியில் இருந்து வந்த பணத்தட்டுப்பாடுகள் நீங்கிப் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் இன்னும் சற்று காலதாமதமாகவே தீரும். பங்காளிகளுடன் கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தவிர்த்தல் நல்லது. குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவீர்கள். உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருள் வரவும் மன மகிழ்ச்சியும் வந்து சேரும். பொதுவாக இது ஒரு மன நிம்மதி தரும் வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் மற்றும் காளி போன்ற அம்மன் வழிபாடுகளை செய்து வரவும்.

11.கும்பம்:-

கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வங்கிகள் மூலம் புதிய வீடு நிலங்கள் வாங்குவதற்கான எண்ணங்கள் சற்று கால தாமதமாகவே நிறைவேறும். மனைவியின் உடல் நிலையில் சில பாதிப்புகள் ஏற்படுவன் மூலம் மருத்துவ செலவுகள் உண்டாகலாம் . நாட்பட்ட தீராத நோய்கள் தீர வேண்டி புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் நல்லபலன் அடைவீர்கள். நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வதன் மூலம் புதிய பிரச்சனைகள் வர இருப்பதால் பயணங்களைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகளைக் குறைப்பதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற விசங்களுக்காகப் புதிய முயற்சிகளில் தலையிட்டு வெற்றி பெறுவீர்கள். பழுது பட்ட ஆலயங்கள் மற்றும் வீடு வாகனங்களைப் புதுப்பிப்பதற்கான பணிகளில் ஈடுபடுவீர்கள். சினிமா, நாடகம் போன்ற துறை சார்ந்தவர்கள், அழகுக் கலைக் கூடங்களை நடத்துபவர்கள், இனிப்புத் தின் பண்ட வியாபாரிகள், திருமணத் தகவல் மையங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். அண்டை அயலார்களிடம் கவனமாகப் பேசிப் பழகி விட்டுக் கொடுத்துப் போகுவதன் மூலம் மனம் நிறைவடைவீர்கள். தீராத நோய்கள் மற்றும் கடன் தொல்லைகள் தீர ஆலய வழிபாடுகளை செய்து வர எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றியைப் பெறுவீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம் வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

12.மீனம்:-

மீனராசி அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். உத்தியோக விசயமாகப் பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். நீண்ட காலமாகப் பிரச்சனைகளில் இருந்து வந்த அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம். மிக நீண்ட காலமாக நினைத்துக் கொண்டு இருந்த தீர்த்த யாத்திரைகள் சென்று வர வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சகோதர, சகோதரிகளால் பொருள் வரவும் மன மகிழ்ச்சியும் ஏற்படும். தேவையில்லாத புதிய நண்பர்களின் தொடர்புகளால் வீண் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம். மஹான்களின் தரிசனங்கள் மூலம் மனநிம்மதி அடைவீர்கள். தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், பூஜை சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள், கம்பியூட்டர் துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணிகள் செய்வோர்கள், அறநிலையத் துறைகளை சார்ந்தவர்கள், பேராசியர்கள், அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள் ஆகி யோர்கள் நல்ல பலனை அடைவார்கள்.விவசாயம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்து இருந்த அரசு சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். வேற்று மதத்தவரால் சில ஆதாயங்கள் கிடைக்கும். பணத் தேவைகளுக்காக பூர்வீகச் சொத்துக்கள் சிலவற்றை விற்பதன் மூலம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக் கிழமையில் தட்சிணாமூர்த்தி ஆலய வழிபாடு செய்து வரவும்.

***************************************************************

Gnanayohi Dr. P. Esakki, I. B. A. M. , R. M. P. , D. I. S. M
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627 759
Tirunelveli District, Tamil Nadu, India.
Phone : 04633-243029,
Mobile: 98425-10578, 98425-29691,
Fax: 04633 -240390
Website :- www. gnanayohi. com

About The Author