இராசிபலன்கள்(13-9-2010 முதல் 19-9-2010 வரை)

1.மேசம்:-

மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கலைத்துறையினர்கள் மற்றும் அரசியல் வாதிகளிடம் ஏமாற்றம் அடையாமல் இருங்கள். உத்தியோகத் துறையினர்கள் மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். அரசியல் வாதிகளிடம் இருந்து எதிர் பார்த்த ஆதாயம் கிடைக்கும். கணவன், மனைவி உறவுகளில் பிரச்சனைகள் வந்து நீங்கும். உடம்பில் தலை மற்றும் முகம் ஆகிய உபாதைகள் வந்து தீரும். விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும். மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொண்டு அவதிப் படாதீர்கள். காவல் துறை, இராணுவம், தீயணைப்புத் துறை சார்ந்தவர்கள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள், கேஸ், வெல்டிங், பெட்ரோல், மண்ணெண்ணைய், டீசல் சம்பந்தமாகிய பொருட்களின் வியாபாரிகள் நல்ல லாபம் அடைவார்கள். கோர்ட் வழக்கு சம்பந்தமாகிய விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியம் கை கூடும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் கூட்டுதொழில் முயற்சிகளில் எதிர்பாராத லாபம் அடையலாம். உற்றார் உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும் நிம்மதியும் வந்து சேரும். வங்கிகளின் மூலமாக எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-சூரிய வழிபாடு செய்து வரவும்.

2.ரிசபம்:-

ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் தொடர்பால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். தென் திசையில் இருந்து எதிர் பாராத நல்ல செய்திகள் வந்து சேரும்.பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நல்ல முடிவுகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வீடு மாற்றங்கள் ஏற்படலாம். சேர் மார்க்கெட் மற்றும் கமிசன் சம்பந்தமான தொழிற் செய்வோர்கள் கவனமுடன் செயல் படவும். காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும். மிகுந்த பிரயாசையின் மேல் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சமாளித்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். தண்ணீர், கூல்டிரிங்ஸ் மற்றும் திரவ சம்பந்தமாகிய பொருட்களின் வியாபாரிகள், கடல்துறை சார்ந்தவர்கள், பூஜை பொருட்களின் வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள், மடாதிபதிகள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். கண்களில் கவனம் தேவை. வீடுகளைப் புதுப்பித்துக் கட்ட போட்ட திட்டங்களில் காலதாமதம் ஏற்படும். வங்கிகளில் இருந்து எதிர்பார்த்து இருந்த பணம் கிடைக்கும். பிள்ளை
களால் தனவரவும், மனநிம்மதியும் உண்டாகும். ரேஸ், லாட்டரி போன்ற விசயத்தில் பணம், பொருள்களை ஏமாறாமல் இருக்கவும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து வரவும்.

3.மிதுனம்:-

மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நாட்பட்ட சொத்து விசயமான அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம். காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சூதாட்டமாகிய ரேஸ், லாட்டரி போன்ற விசயத்தில் பணம், பொருள் ஏமாற்றம் அடைய நேரிடும். செய்யாத குற்றங்களுக்காக அவப் பெயர்கள் வரக் கூடும் என்பதால் கவனம் தேவை. உணவு உண்ணுதல் மற்றும் நித்திரை போன்றவற்றில் கால தாமதம் ஏற்படலாம். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் உண்டாகும். தாய் வழிச் சொந்த பந்தங்களால் ஆதரவுகள் வந்து சேரும். புதியதாகக் கடன் வாங்க செய்த முயற்சிகளில் வெற்றி பெறச் சற்று கால தாமதம் ஆகலாம். காய்கறிகள், இலை, கீரை போன்ற உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள், தபால் தந்தித் துறை சார்ந்தவர்கள், அச்சுத் தொழிற் கூடங்களை நடத்துவோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர்களுக்கு மிகவும் நற்பலன் தரும் காலமாகும். நீண்ட காலமாக இருந்து வந்த பிணிகளுக்கு புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்கும். தொலை தூரப் பயணங்களில் மிகுந்த கவனமுடன் சென்று வருதல் நல்லது. உடம்பில் சளி, அல்ர்ஜி மற்றும் சீதளம் ஆகிய தொல்லைகள் வந்து போகும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்

4.கடகம்:-

கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். விவசாயத்தில் புதிய முறைத் திட்டங்களின் மூலம் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். வராத பணம் மற்றும் பொருட்கள் திரும்பக் கை வந்து சேரும். பொதுப்
பணிகளில் ஈடுபடுவோர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். நண்பர்களின் உதவியால் புதிய தொழில் துவங்க போட்ட திட்டங்கள் தடையின்றி நிறைவேறும். குடும்பத்தில் காரணமற்ற மனக் கசப்புகள் வந்து போகும். கல்வித்துறையைச் சார்ந்தவர்கள் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். லாட்டரி போன்ற விசயத்தில் பணம் பொருள்களை ஏமாற்றம் அடையாமல் இருக்கவும். விபரீதமான எண்ணங்களை விட்டுச் செயல் பாட்டில் கவனம் செலுத்துங்கள்.நெருப்புத் தொழில்,காவல்துறை இராணுவம் போன்ற துறை சார்ந்தவர்கள், நில புலன்களை வாங்குவோர் விற்போர்கள், நிலவளத்துறை மற்றும் பொதுப்பணித் துறையை சார்ந்தவர்கள், நிலக்கரி, விறகு போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவீர்கள். வங்கிகளின் உதவியால் எதிர் பார்த்திருந்த கடன் தொகைகள் தாமதமின்றி உடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. யாத்திரையில் மிகவும் கவனமுடன் பயணம் செய்து வருதல் நல்லது. குழந்தைகளுக்காக திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிவப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும்.

5.சிம்மம்:-

சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். தாயின் உடல் நிலையில் ஏற்படும் பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் வந்து சேரும். வடக்குத் திசையில் இருந்து சில நற் செய்திகள் வந்து சேரும். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர்ந்து அவற்றில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். நீண்ட தூரப் பயணங்களின் மூலம் சந்திக்க வேண்டிய நபர்களை சந்திப்பதில் கால தாமதம் ஏற்படலாம். குழந்தைகளால் பெயர் புகழ் ஏற்படலாம். உற்றார் உறவினர்களால் மன நிம்மதி இன்மையும், காரணமற்ற பொருட் செலவுகளும் உண்டாகும். அரசியல் வாதிகளால் சில எதிர்பார்க்காத ஆதாயங்கள் அடைவீர்கள். பூஜை சாதன வியாபாரிகள், கம்பியூட்டர் துறை சார்ந்தவர்கள்,  நறுமணப் பொருட்களின் வியாபாரிகள், கல்லூரிப் பேராசிரியர்கள், சேர் மார்க்கெட் மற்றும் கொடுக்கல் வாங்கல் போன்ற தொழிற் செய்வோர்கள், பூ, பழம் இவற்றை ஏற்மதி இறக்குமதி செய்வோர்கள், இனிப்பு சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள், தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். தீராத பழைய வழக்குகளில் நல்ல முடிவுகளை எதிர் பார்க்கலாம். வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும். அரசியல் வாதிகள் மிகவும் எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் சிறந்ததாகும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:வடகிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து வரவும்.

6.கன்னி:-

கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் எலும்பு, நரம்பு சம்பந்தம் ஆகிய பிணிகள் வந்து போகும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தனவரவு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப் பெண்களையும், பரிசு மற்றும் பாராட்டுதல்களையும் பெறக் கூடிய காலமாகும்.வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் சற்று கால தாமதம் ஏற்படலாம். புதிய நண்பர்கள் சேர்கையால் எதிர் பாராத தன லாபம் அடைய வாய்ப்பு உள்ளது. வெளி நாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டாகும். வண்டி வாகனங்களில் மிக எச்சரிக்கையுடன் யாத்திரை செய்து வருதல் நல்லது. செய்தொழிலில் பங்காளிகளால் எதிர் பார்த்த பணம் கைக்கு வந்து சேரும் காலமாகும். தந்தை, மகன் உறவுகள் நன்றாக இருக்கும். எதிர்பாராமல் மஹான்களின் நல்லாசிகள் கிடைத்து அதனால் மன திருப்தி அடையலாம். புதிய நண்பர்கள் சேர்க்கையை தவிர்தல் நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்கள் சம்பந்தமாக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். இரும்பு, இயந்திரம், இரசாயனம் போன்ற துறை சார்ந்தவர்கள், பலசரக்கு, எண்ணைய் வகைகள், பழைய இரும்பு பொருட்கள் ஆகிய வியாபாரம் செய்வோர்கள், இன்சினியரிங் துறையை சார்ந்தவர்கள் நற் பலன் அடைவார்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்.
இரரியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சுவாமி ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.

7.துலாம்:-

துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். காதல் சம்பந்தமான விசயங்களில் மிக கவனம் தேவை. சம்பந்தம் இல்லாத நபர்களால் காணாமற் போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும்.புதிய தொழில்களை ஆரம்பம் செய்ய எண்ணுவீர்கள். ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற்சாலைகள் இட மாற்றம் ஏற்படலாம். செய்தொழிலில் புதிய கூட்டு முயற்சிகளைத் தவிர்க்கவும். வெளிநாடு சென்று வருதல் சம்பந்தமான முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரும். பொதுப்பணித் துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர்கள், பொதுப்பணித் துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், வக்கீல்கள் அச்சுத் தொழிற் செய்வோர்கள், ஸ்டேஷனரி சம்பந்தமான நோட்டு, பேனா, புத்தகம் போன்ற வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலன் அடைவார்கள். உறவினர்களின் வருகையால் பொருள் வரவு உண்டாகும். காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கும். குல தெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தேவையில்லாமல் பழைய பிரச்சனைகள மீண்டும் தலை தூக்க வாய்ப்பு உள்ளது. சேர் மார்க்கெட்டில் ஈடுபாடு உடையவர்கள் கவனமுடன் இருக்கவும். அடிமை ஆட்களால் பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவும் ஏற்படலாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

8.விருச்சிகம்:-

விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். இது நாள் வரையில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் மாறி தேவையான பொருள் வரவு உண்டாகும். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான வாய்ப்பு உள்ளது. வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்கள் சந்திப்பால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். விருந்தினர் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாக வாய்ப்பு உள்ளது. செல்வ செல்வாக்கு, புகழ் கூடும். புதிய வீடு, நிலம் வாகனங்களை வாங்கக் கூடிய காலமாகும். மற்றவர்களுக்காக சொத்து சம்பந்தமான விசயங்களுக்கு ஜாமீன் போட்டு வீண் பிரச்சனைகளை விலைக்கு வாங்காதீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இது நாள் வரையில் இருந்து வந்த பிரச்சனைகள் மாறி மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ள காலமாகும். இரசாயனம், பழைய பேப்பர் பிளாஷ்டிக் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள், மீன், முட்டை, மாமிசம் போன்ற அழுகல் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், அணு ஆராய்ச்சித் துறையைச் சார்ந்தவர்கள், விஞ்ஞானிகள், மடாதிபதிகள், துப்புரவுப் பணிகளைச் செய்வோர்கள், வட்டித் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். மகான்களின் தரிசனத்திற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ள திட்டம் போடுவீர்கள். ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு மன மகிழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளதுபொதுவாக இது ஒரு நற் பலன் தராத வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிவப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-விநாயகர் வழிபாடு செய்து வரவும்.

9.தனுசு:-

தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். தீடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ், லாட்டரி மூலம் பணம் கிடைக்கும் என்று கருதி ஏமாற்றம் அடைய வேண்டாம். காதல் சம்பந்தமான விசயங்களில் மிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். வேற்று மதத்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள், மீன்பிடித் தொழிற் செய்வோர்கள், பழைய கழிவுப் பொருள் வியாபாரிகள், சாயப் பவுடர் போன்ற தொழிற் சாலைகளை நடத்துவோர்கள் மற்றும் அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்களுக்கும் நல்ல லாபம் உண்டாகும். வீடுகளில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது உடல் நிலையில் அலர்ஜி மற்றும் தொற்று நோய் போன்ற உபாதைகள் வரக்கூடும் என்பதால் உண்ணும் உணவில் கவனம் தேவை. புதிய வீடு நிலம் வாங்க எதிர் பார்த்திருந்த கடன் கேட்ட பணம் கை வந்து சேரும். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி மருத்துவ செலவுகள் குறையும். பொருளாதார நெருக்கடியில் மனைவி அல்லது மனைவி வழிச் சொந்த பந்தங்களால் மாற்றம் உண்டாகி மன நிறைவை அடைவீர்கள். காணாமற் போன பொருட்கள் சம்பந்த மில்லாத நபர்களால் வீடு வந்து சேரும். மன தைரியமுடன் எடுத்த காரியத்தைச் சிரத்தையுடன் செய்து முடிப்பீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-பிதுர் மற்றும் அம்மன் வழிபாடு செய்து வரவும்.

10.மகரம்:-

மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் சம்பந்தமாக பிரயாணங்களை மேற்கொள்ளுவீர்கள். காதல் சம்பந்தமான விசயங்களுக்காக வீண் பொருட் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகளும், பொருட் செலவுகளும் உண்டாகலாம். வேண்டாத விசயங்களில் தலையிட்டுச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாது இருக்கவும். நண்பர்களால் புதிய தொழில் முயற்சிகள் மற்றும் புதிய கடன் வாங்குவது போன்ற முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பங்குத் தொழில், தங்கம் வெள்ளி நகை வியாபாரிகள் மிகுந்த கவனமுடன் வர்த்தகத்தில் ஈடு படுதல் சிறந்ததாகும். மகான்களின் சந்திப்பால் மன நிம்மதி அடைவீர்கள். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. மற்றவுர்களுக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும். தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், அலங்காரப்பொருள் வியாபாரிகள், திருமணத் தகவல் மையங்களை நடத்துபவர்கள், சினிமா மற்றும் நாடகத் துறைகளைச் சார்ந்தவர்கள், கார், லாரி, ஆடு, மாடு போன்ற வாகன சம்பந்தமான தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். தந்தை மகன் உறவில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளில் மிகுந்த கவனமுடன் இருக்கவும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

11. கும்பம்:-

கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். ரேஸ், லாட்டரி போன்ற சூதாட்டங்கள் மூலமாகப் பணம் ஏமாற்றம் அடையாமல் இருப்பது நல்லதாகும். உற்றார் உறவினர்களால் மன சஞ்சலம் வந்து சேரும். பூர்வீகச் சொத்துக்கள் போன்ற நீண்ட காலப் பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்ப்புகள் வந்து சேரும். உடம்பில் மேகம், உஷ்ணம் ஆகிய உபாதைகள் வந்து போகும். கணவன், மனைவி உறவுகளில் கவனமுடன் இருத்தலோடு, முன் கோபம் தவிர்த்தல் நல்லது. வீடு மற்றும் தொழிற் சாலைகளைத் திருத்திக் கட்டுவதன் மூலம் பொருட் செலவுகள் வர வாய்ப்புகள் உள்ளன. யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத புதிய நபர்களால் சிற் சில ஆதாயங்கள் அடையக் கூடும். அரசு உயர் பதவி வகிப்பவர்கள், நெருப்புத் தொழிற் செய்வோர்கள், உணவு தானிய வியாபாரிகள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள், ஜவுளி மற்றும் நூல் வியாபாரிகள், விறகு, நிலக்கரி போன்ற பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன்கள் அடைவார்கள். தேவாலயத் திருப்பணிகளில் கலந்து கொண்டு தொண்டாற்றுவதன் மூலம் மன நிறைவு ஏற்படும். பிள்ளைகளால் பொருள் வரவு உண்டாகுவதுடன் அவர்களாலேயே காரணமற்ற பொருட் செலவுகளும் வந்து சேரும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமுடன் பேசிப் பழகவும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.

12.மீனம்:-

மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பிறர் விசயங்களுக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும்.வெளி நாட்டில் வசிப்பவர்கள் தங்களது தாய் நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ள காலமாகும். உடம்பில் சுரம், உஷ்ணம் ஆகிய உபாதைகள் வந்து போகும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் மிகுந்த கவனமுடன் செயல் படுவது நல்லது. இதுவரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் மாறி மனச் சந்தோசம் அடையலாம். புதிய வீடு, நிலம் வாங்குவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றிகள் பெறுவீர்கள். தூரத்து உறவினர்களின் வரவால் எதிர் பாராத பொருட் செலவுகள் உண்டாகும். பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன் வாங்குவீர்கள் காதல் விசயங்களில் மிகுந்த மனச் சந்தோசம் ஏற்படும். தீர்த்த யாத்திரைகள் சென்று வர எண்ணுவீர்கள். நீண்ட தூரப் பயணங்களின் போது பெரிய மனிதர்கள் சந்திப்பு ஏற்பட்டு அவர்களால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். விவசாயம் செய்வோர்களுக்கு விவசாயம் நன்கு பலிதமாகும். பூ, பழம், விபூதி போன்ற பூஜைப்பொருள் வியாபாரிகள், அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள், தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், பழரச பானங்கள் போன்ற தொழிற் செய்யக் கூடியவர்கள் லாபம் பெறுவர். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து வரவும்.

***************************************************************

Gnanayohi Dr. P. Esakki, I. B. A. M. , R. M. P. , D. I. S. M
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627 759
Tirunelveli District, Tamil Nadu, India.
Phone : 04633-243029,
Mobile: 98425-10578, 98425-29691,
Fax: 04633 -240390
Website :- www. gnanayohi. com

About The Author