கவின் குறு நூறு-10 (27-29)

27

கோலப் பொடிப் பெட்டியைத்
தூக்கி வந்து அப்படியே
கொட்டினான் கவின்;
அவனுக்குள் இருந்த கோலங்களைக்
கண்டு அதிசயித்தது பொடி.

28

காக்கையைக் கவின் வரையத் தொடங்கியதும்
அதற்குள் வந்துவிடத்
துடித்தது காக்கை.
என்னை வரையச் சொல்லி கவின்
வரைந்தபோது காக்கை
அதற்குள்ளிருந்து பறந்து போகத் தவித்தது.

29

குடிப்பதைவிட அவன் கொட்டும் தண்ணீர் அதிகம்.
தரையின் தாகம் தெரிகிறது அவனுக்கு,
தெரியவில்லையே மற்றவர்க்கு!

About The Author