கவின் குறு நூறு-15

43

கவின் கண்களுக்குள் வந்து
பவுர்ணமிகளை யாசிக்கின்றன
இரவீந்தர நாதரின்
‘இளம்பிறை’க் கவிதைகள்.

44

இடுப்பில் குழந்தையோடு வாசலில்
பூத்திருந்த ரோஜாவில் மனதைப்
பறிகொடுத்திருந்தாள் அவன் அம்மா.
அவள் இடுப்பில் பூத்திருந்த
குழந்தையின் முகத்தில்
தன்னைப் பறிகொடுத்திருந்தது ரோஜா.

45

எந்தக் குறும்பும் செய்யாத
நேரத்தில் தான் அதிகம் கவலை;
எந்தக் குறும்புக்குக் கவின்
யோசனை செய்கிறானோ என்று.

About The Author