தமிழ் என்னும் விந்தை!-சதுரங்க பந்தம் – 9

புதிர்: கீழே உள்ள வார்த்தைகளைக் கவிதையாக மாற்ற வேண்டும். குதிரை தாவும் போக்கில் சென்று உரிய கட்டங்களில் உள்ள வார்த்தைகளை வரிசையாக எடுத்துப் பொருத்தினால் கவிதையைப் படிக்க முடியும்!

sortokinggoodsayluckloyeth
Andmothasoondisourtobad
Placerychurchhisforceishatal
erqueenhimwighthetomaytruth
manhisandandchessesknightop’s
asneertheandunlawnoftates
casthatatlesspawnnobishlant
ethfaithtleshavethegalinlove

சற்றுக் கஷ்டமான புதிர்தான்! உலகில் குறுக்கெழுத்துப் போட்டி அறிமுகமாவதற்கு முன்னர் இது போன்ற பொழுதுபோக்குப் புதிர்கள் மேலைநாடுகளில் வெளிவந்து கொண்டிருந்தன. கவிதையைக் கண்டுபிடிக்க எப்படி சதுரங்கக் கட்டங்கள் வழியே செல்வது என்பதைப் பார்ப்போம்:-

கீழே உள்ள கட்டங்களின் படி வார்த்தைகளை அமைக்க வேண்டும்.

14 55 22 37 12 51 18 35
23 38 13 54 17 36 11 50
56 15 40 21 52 9 34 19
39 24 53 16 33 20 49 10
2 57 28 41 8 61 32 47
25 42 1 60 29 48 7 62
58 3 44 27 64 5 46 31
43 26 59 4 45 30 63 6

ஒன்றாம் எண் கட்டத்தில் இருக்கும் வார்த்தை the. இரண்டாம் எண் கட்டத்தில் இருக்கும் வார்த்தை man. இப்படியே 64 வரை உள்ள எண்களில் எந்தெந்த வார்த்தைகள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அவற்றைச் சேர்த்துப் பார்த்தால் கீழே உள்ள கவிதை வருகிறது.

The man that have no love of chess
Is, truth to say, a sorry wight,
Disloyal to his king and queen.
A faithless and ungallant knight;
He hateth our good mother church,
And sneereth at the bishop’s lawn;
May bad luck force him soon to place
His castles and estates in pawn!

இனி, இந்த ஆங்கிலக் கவிதையைக் கட்டங்களில் காண்போம்:

சதுரங்க விளையாட்டு பற்றிய கவிதை இது! குதிரை தாவும் விதமாகத் தாவித் தாவி இதைக் கண்டுபிடிப்பதில் ஓர் ஆனந்தம் இருக்கவே செய்கிறது. ஆனால் இதில் sorry, disloyal, faithless, ungallant, hateth, mother, sneereth, bishop’s, castles போன்ற வார்த்தைகள் பிரிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். 64 வார்த்தைகளுக்கு பதில் 52 வார்த்தைகளே கவிதையில் இருப்பதால் இப்படிப் பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இப்படி, வார்த்தைகளைப் பிரித்து சதுரங்கத்தில் அமைப்பதில் அவ்வளவாக சுவாரசியம் இல்லை என்பது உண்மையே. தமிழில் எழுத்துக்கள் மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டுள்ள செய்யுள்களையும் அதில் அடங்கியுள்ள விந்தைகளையும் பார்க்கும்போது தமிழ்மொழியின் உயரிய தன்மை தெரிய வருகிறது.

இது ஒரு புறமிருக்க, இந்த ஆங்கிலக் கவிதையில் உள்ளது போன்ற அமைப்பு சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த அந்தத் தமிழ் நேரிசை ஆசிரியப்பாவில் உள்ளதா? பாடலின் பொருள் என்ன? விளக்கம் கிடைக்கவில்லை. ஆனால், இவை போன்ற நுட்பமான விஷயங்கள் அடங்கிய ‘தாரணை’ நூல் தமிழகத்திலோ அல்லது தமிழ் நூல்களைச் சேகரித்துள்ள உலகம் முழுவதுமாகப் பரவி ஆங்காங்குள்ள நாடுகளில் இருக்கும் தமிழ் ஆர்வலர்களிடையேயோ நிச்சயம் உள்ளது. ஒருநாள் நமக்கு அது கிடைக்கக்கூடும்! கிடைக்கும்போது, அதில் சதுரங்க பந்தம் பற்றிய இன்னும் சில விந்தைகளை நாம் அறிய முடியும். அந்த நாளை விரைவில் உருவாக்குவது தமிழ் ஆர்வலர்களின் கையிலேதான் உள்ளது.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும், அரிய நமது தமிழ் நூல்களைக் கண்டெடுத்து அச்சிட்டு விளக்குவீர் என்று பாரதி பாணியில் உரக்கக் கூவத்தான் தோன்றுகிறது!

–விந்தைகள் தொடரும்…

About The Author