பயணம் தொடரும்

அது ஒரு சின்ன ரோஜாமொட்டு
ஆண்டவன் படைத்த அழகிய மொட்டு
அதன் இதழ்களை அழகாய்ப் பிரித்திடும்
ஆற்றல் என் கரங்களுக்கில்லை

இதழ்களை விரிக்கும் அந்த அதிசயம்
ஆண்டவன் மட்டுமே அறிந்த ரகசியம்
மானிடன் நான் விரிக்க முயல்கையில்
இதழ்கள் மடியும் என் கரங்களில்

மாயவன் படைத்த மலரைக்கூட
விரித்திட இயலா வீணன் நான்
என் வாழ்க்கையின் ரகசியம்
எப்படி அறிவேன்?

தலைவன் அவன் தன் தாள் பற்றினேன்
நாளும் பொழுதும் ஒவ்வொரு கணமும்
தடம் பதிக்கும் ஒவ்வொரு அடிக்கும்
துணையிருக்கும் ஆசான் அவனே

அவனன்றி யாரறிவார் என்
வாழ்க்கைப்பாதையின் வளைவுகளை
ரோஜாவின் இதழை விரிப்பதுபோல
வாழ்க்கைப் புதிரை அவிழ்ப்பவன் அவனே

பயணம் தொடரும் படைத்தவன் அருளால்

About The Author