பாபா பதில்கள் – ஆன்மீகத்தில் தன்னை உணர எத்தனை மாதம், அல்லது எத்தனை நாட்கள் ஆகும்?

Q. உண்மையான ஆர்வம், வைராக்கியம் கொண்டவன் ஆன்மீகத்தில் தன்னை உணர எத்தனை மாதம், அல்லது எத்தனை நாட்கள் ஆகும்? அதற்கான பிரயத்தனம் என்ன?

 Siva Sankar Baba
"பருவத்தால் அன்றிப் பழா." விதை விதைத்த உடனேயே மரம் வந்து விடுகிறதா? இந்த ஜென்மத்து பிரயாசையினால் மட்டும் ஆன்மாவை அறிந்துவிட முடியாது. தன்னை அறிகிற நிலை எத்தனையோ பிறவிகளின் முயற்சியினால் வருகிறது. முன்பிறவிகளில் நாம் சேர்த்து வைத்திருக்கிற தவபலம் ஒரு காரணமாக அமையுமே தவிர இப் பிறவியில் நாம் செய்கிற பூஜை புனஸ்காரங்களினால் ஆத்மாவை அறிந்து கொள்ள முடியாது. It takes its own time. அதற்கான பிரயத்தனம்தான் ஆன்மீகம்.”

About The Author