• Sorry, this product cannot be purchased.
229_kadaciyaka_cirithavan

$5

பல்வேறு காலகட்டங்களில் எழுதிய 200க்கும் மேலான சிறுகதைகளுள் சிறந்தவை என்று ஆசிரியர் கருதும் பதினைந்து கதைகள் அடங்கிய தொகுதி. கதைக்கருக்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. தன் சமத்காரப் பேச்சில் தானே மயங்கி நெடுந்தூரம் சென்று, இறுதியில் சிரிப்புக்கு ஆளாகும் ஓர் அறிவு ஜீவி; பயங்கரமான இந்து முஸ்லிம் கலவரங்களுக்கு மத்தியிலும் யதார்த்தம் மாறாமல் கல்மிஷம் சிறிதும் இல்லாமல் பரஸ்பரம் வழக்கம் போல் உதவிக் கொள்ளும் சிறு வியாபாரிகள்; ஒன்றும் தெரியாதவள் என்று நினைத்திருந்த மனைவியே சத்குருவான கதை; அடுத்து என்ன செய்வது என்பதைப் பற்றியே சிந்தித்து அப்போது செய்யும் காரியங்களைச் சொதப்பும் ஒரு குழப்பவாதி; தவறு தன்மீது என்பதையே அறியாமல் அடுத்தவர் மீது குற்றம் சாட்டும் ஒரு அப்பாவி; இந்த உலகம் தன்னைச் சுற்றியே சுழல்கிறது என்று நினைத்துக்கொண்டு அடுத்தவர் அபிப்பிராயத்துக்காக சின்னச் சின்ன விஷயங்களிலும் அலட்டிக்கொள்ளும் ஓர் ஆத்மா; இரு வேறு முற்றிலும் வேறுபட்ட பின்னணியிலிருந்து வந்தாலும் நட்பு பாராட்டுவது மட்டும் அல்லாமல், அடிப்படையில் ஒரேமாதிரியான எண்ணப்போக்கு கொண்ட இரு இளைஞர்கள்;நாடி சோதிடம் விசித்திரமாகப் பலித்த விதம்; போலி உரிமைவாதிகளின் கபடம்; குற்றம் புரிந்தவர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க ஆவி உலகத் தொடர்பு கருவியாக இருந்த விதம்; தவிர சில திகில் கதைகள்-இப்படி பரந்துபட்ட நிலைக் களன்கள். விறுவிறுப்பாகச் செல்லும் நடையும் இழையோடும் மெல்லிய நகைச்சுவையும் இந்தக் கதைகளுக்கு சிறப்பு சேர்க்கின்றன

Quantity

SKU: facf1360daf6.

Product Description

Kadaisiyaaga siriththavan is a collection of 15 short stories selected by the author himself as his best out of over 200 short stories penned by him. The central themes of the stories are varied. A pseudo intellectual who gets carried away by his own intelligence and ends up as a laughing stock, the common small time traders who help each other without much ado amidst raging communal violence, the transformation of an ordinary house wife, whom the man considers innocent, to a guru, a person who messes up his present by thinking about the future all the time, a simple person who blames all mishaps on others without realizing that he is the cause for the same, a person who is so absorbed in himself that he presumes that the whole world is watching his every move , friendship between two youths who, though coming from quite different backgrounds, have the same wavelength of thoughts, a freak manner in which the traditional Nadi Jothidam becomes true, the fraudulence of the rights activists, and some horror stories are included in the collection. The stories are very interesting, and the author’s style of writing with an undercurrent of humor is quite appealing. (பல்வேறு காலகட்டங்களில் எழுதிய 200க்கும் மேலான சிறுகதைகளுள் சிறந்தவை என்று ஆசிரியர் கருதும் பதினைந்து கதைகள் அடங்கிய தொகுதி. கதைக்கருக்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. தன் சமத்காரப் பேச்சில் தானே மயங்கி நெடுந்தூரம் சென்று, இறுதியில் சிரிப்புக்கு ஆளாகும் ஓர் அறிவு ஜீவி; பயங்கரமான இந்து முஸ்லிம் கலவரங்களுக்கு மத்தியிலும் யதார்த்தம் மாறாமல் கல்மிஷம் சிறிதும் இல்லாமல் பரஸ்பரம் வழக்கம் போல் உதவிக் கொள்ளும் சிறு வியாபாரிகள்; ஒன்றும் தெரியாதவள் என்று நினைத்திருந்த மனைவியே சத்குருவான கதை; அடுத்து என்ன செய்வது என்பதைப் பற்றியே சிந்தித்து அப்போது செய்யும் காரியங்களைச் சொதப்பும் ஒரு குழப்பவாதி; தவறு தன்மீது என்பதையே அறியாமல் அடுத்தவர் மீது குற்றம் சாட்டும் ஒரு அப்பாவி; இந்த உலகம் தன்னைச் சுற்றியே சுழல்கிறது என்று நினைத்துக்கொண்டு அடுத்தவர் அபிப்பிராயத்துக்காக சின்னச் சின்ன விஷயங்களிலும் அலட்டிக்கொள்ளும் ஓர் ஆத்மா; இரு வேறு முற்றிலும் வேறுபட்ட பின்னணியிலிருந்து வந்தாலும் நட்பு பாராட்டுவது மட்டும் அல்லாமல், அடிப்படையில் ஒரேமாதிரியான எண்ணப்போக்கு கொண்ட இரு இளைஞர்கள்;நாடி சோதிடம் விசித்திரமாகப் பலித்த விதம்; போலி உரிமைவாதிகளின் கபடம்; குற்றம் புரிந்தவர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க ஆவி உலகத் தொடர்பு கருவியாக இருந்த விதம்; தவிர சில திகில் கதைகள்-இப்படி பரந்துபட்ட நிலைக் களன்கள். விறுவிறுப்பாகச் செல்லும் நடையும் இழையோடும் மெல்லிய நகைச்சுவையும் இந்தக் கதைகளுக்கு சிறப்பு சேர்க்கின்றன)

Additional Information

ebookauthor

டி.எஸ்.வேங்கட ரமணி