கவின் குறு நூறு-21

64
உடைந்த பலூனிலிருந்து
வெளியே வந்த காற்று ஏங்கியது
‘இனி எப்படி விளையாடுவேன்
குழந்தையோடு?’

65
வீட்டுக்குள் விரித்து வைக்கிறான் குடையை;
வெயிலில் மழையில் வெளியே போனால்
மடக்கி வைக்கிறான்; குடைக்கு
எப்போதும் கொண்டாட்டம் அவனோடு.

66
எங்கள் வீட்டுக்கு முன்னுள்ள மரம்
என்ன சொல்லியதோ கவின்
சின்ன விழிகளுக்குள் வந்து;
இப்போது அதன் அத்தனை
பூக்களும் அவன் கண்களில்.

About The Author

1 Comment

  1. Rosmina

    வெர்ர்ய் கோட் என் மைலூக்கூ அனுப்ப முடிஉம

Comments are closed.