குறுங்கவிதைகள்

ஏதேனும் ஒரு மூலையில்
நின்று
எதிர்க்கப் போகிறேன்
என்றாலும்,
ஓடுவது எனக்கும்
துரத்துவது அவர்களுக்கும்
பிடித்துதானிருக்கிறது
இப்போது..

******

என் புத்தியின் சேகரிப்பில்
ஒவ்வொரு சொல்லாக
நீக்கிக் கொண்டே வந்தால்
எஞ்சி நிற்கும்
சொல்லாக நீ.

******

தலைவர் சிலைக்கு
போலீஸ் காவல்
வீடுகளில் திருடர்கள்

About The Author

2 Comments

  1. Kaa.Na.Kalyanasundaram

    கவிதைகள் அனைத்தும் சிறப்பு.

Comments are closed.