சிரிக்க… சிரிக்க.. – 8

காதலி: நாம கல்யாணம் செய்துக்க வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்.
காதலன்: விளையாடாதே. நம்மளை யார் கல்யாணம் செய்துக்குவாங்க?

*******

காதலன்: நான் உன்னுடைய இதயத்தில் இருப்பதை விட மூளையில் இருக்க ஆசைப்படறேன்.

காதலி: உளறாதீங்க!

காதலன்: நிஜமாதான் சொல்றேன். எங்க நிறைய இடமிருக்கோ அங்கே இருப்பதுதானே புத்திசாலித்தனம்!

******

மனைவி: நான் வேற யாரையாவது கல்யாணம் செய்திருந்தா என்னாயிருக்கும்னு என்னைக்காவது நினைச்சுப் பார்த்திருக்கீங்களா?

கணவன்: நான் எப்பவும் யாருக்கும் கெடுதல் நினைக்கிறதில்லையே!

******

மனைவி: ஏன் இப்படி தூங்கி வழியறீங்க?

கணவன்: இராத்திரி நான் சரியாவே தூங்கலை.

மனைவி: ஏன்?

மனைவி: கனவுலேயும் நீதான் எங்கூட இருந்தே.

******

கணவன்: உன்னை கல்யாணம் செய்துக்கிட்டதுல ஒரே ஒரு நல்லது நடந்திருக்கு.

மனைவி: என்ன நல்லது?

கணவன்: இந்த ஜென்மத்துலேயே நான் செய்த எல்லா பாவங்களுக்கும் தண்டனை கிடைச்சிடுச்சு.

*******

About The Author

1 Comment

Comments are closed.