ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு ஜூன் 02 2010 –ல் திருமணம் நடந்தது. அதற்குப் பிறகு என்னுடைய வேலை மற்றும் மனைவி வீட்டாருடன் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால் சரியாக வேலை செய்ய முடியாமலும், தூங்க முடியாமலும் அவதிப்படுகிறேன். என் ஜாதகத்தைப் பார்த்து இதற்கு ஒரு தீர்வு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். – மாதவன், பவானி, ஈரோடு மாவட்டம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் மாதவன் அவர்களே !

29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ஆயில்யம், ராசி கடகம் , லக்னம் தனுசு ஆகும். தங்களின் துணைவியாரின் நட்சத்திரம் விசாகம், ராசி துலாம், லக்னம் சிம்மம் ஆகும். தங்களின் ஜாதகப்படி நல்ல மண வாழ்வு இருக்கிறது. மனம் அமைதி பெற்று நல்ல மண வாழ்க்கை அமைய, வெள்ளிக்கிழமை தோறும் களத்திரக்காரகன் என்று அழைக்கப்படும் சுக்ரனுக்குரிய, “சுக்கிர மூர்த்தி சுபமிகுயீவாய், வக்கிரமின்றி வரமிகு அருள்வாய், வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே, கொடுப்பாய் அடியார்க்கு அருளே” என்ற துதிப்பாடலை சொல்லி வழிபட்டு வரவும். தங்களின் மனக் கவலை நீங்கி நல்ல மண வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

************

வணக்கம் ஐயா, நான் எனது மாமா மகளை நேசிக்கிறேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் ஜாதகப் பொருத்தம் இல்லை. இதற்குப் பரிகார தீர்வு உள்ளதா? ஆண் ராசி விருச்சிகம், நட்சத்திரம் கேட்டை. பெண் ராசி தனுசு, நட்சத்திரம் மூலம். – ஜெயக்குமார், பழனி.

அன்பு நிலாச்சாரல் வாசகர் ஜெயகுமார் அவர்களே !

நட்சத்திரப் பொருத்தத்தின் அடிப்படையில் மட்டுமே திருமணம் முடிவு செய்யப்படுவதில்லை. தாங்கள் இருவரின் ஜாதகத்தையும் அனுப்பி வைத்தால், அதனை ஆராய்ந்து அதற்கேற்ற பரிகாரங்களை வழங்கலாம்.

*********************


பதில்களை வழங்கியவர் :

சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம், ஜோதிடர் திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism,D.H.A.
எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

About The Author