ஜோதிடம் கேளுங்கள்

என்னுடைய ராசியான கடவுள், அவருக்குச் செய்யும் பூஜைமுறைகள் ஆகியன பற்றித் தெரியப்படுத்தவும். – சுபாஸ்ரீ, நெல்லூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகி சுபஸ்ரீ அவர்களே!

36 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவாதிரை, ராசி மிதுனம், லக்னம் மகரம் ஆகும். தாங்கள் மிதுன ராசியையும், திருவாதிரை நட்சத்திரத்தையும் சேர்ந்தவர் ஆதலால், பெருமாளை வழிபடுவதோடு சத்யநாராயணா பூஜையும் செய்து வர வாழ்க்கை வளமாக இருக்கும். பெருமாளின் அருளாசி தங்களுக்குக் கிட்ட நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

******

எனக்கு வேலை கிடைக்குமா? எப்பொழுது கிடைக்கும்? என்னுடைய வருங்காலம் எவ்வாறு இருக்கும்? – சி.ரத்தினவேல், பாண்டிச்சேரி

அன்பு நிலாச்சாரல் வாசகர் ரத்தினவேல் அவர்களே !

29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சித்திரை, ராசி கன்னி, லக்னம் தனுசு ஆகும். தங்களின் ஜாதகப்படி பிப்ரவரி மாதத்திற்குள் நல்ல வேலை கிடைக்கும். தங்களின் ஜாதகப்படி, அரசு சார்ந்த அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. 11-ம் இடத்தில் சூரியன், புதன், குரு, சனி, சுக்ரன் ஆகிய கிரகங்கள் உள்ளதால், தங்களின் வேலையும், அதன் மூலம் கிடைக்கும் வளமும் சிறப்பாக அமையும். நல்ல வேலை கிடைக்க நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

******

என் திருமணம் 13.4.2009 அன்று நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. என் வீட்டில் சம்மதித்து, என் படிப்பு நிறைவு பெறும் வரையும், அத்துடன் என் கணவரின் அக்காவின் திருமணம் ஆகும் வரையும் என் வீட்டில் என்னை இருக்கும்படி என் அம்மா அப்பா சொன்னர்கள். அதன்படி நானும் என் கணவரும் இருக்கிறோம். நாங்கள் எப்பொழுது சந்தோஷமாக வாழ்க்கை தொடங்குவோம்? அவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்குமா? எங்கள் இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் இருக்கிறதா? – சுபஸ்ரீ, சென்னை

அன்பு நிலாச்சாரல் வாசகி சுபஸ்ரீ அவர்களே!

19 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரம், ராசி சிம்மம், லக்னம் துலாம் ஆகும். தங்களது கணவரின் நட்சத்திரம் மிருகசிரீடம், ராசி ரிஷபம், லக்னம் மிதுனம் ஆகும். தங்கள் இருவரது ஜாதகமும் பொருத்தமாக உள்ளது. மேலும் சௌபாக்கியத்தை வழங்கும் குரு பகவான் இருவரின் ஜாதகத்திலும் 9-ம் இடத்தில் அமர்ந்து பூர்வ புண்ய வீடான 5-ம் வீட்டை பார்ப்பதால், தங்களின் மண வாழ்வு நன்றாக இருப்பதோடு மனமொத்த தம்பதிகளாக வாழ்வீர்கள். 2010-ம் ஆண்டுக்குள் தங்களின் சந்தோஷமான வாழ்க்கை ஆரம்பித்து விடும். தங்கள் கணவருக்கு தனியார் துறையில் நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளன. மனம் போல் மண வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

************************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author